திருமளைக்கவுண்டம்பாளையம் பள்ளியின் மதிய உணவு விவகாரம் : சமையலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி மனு

திருப்பூர் : திருமளைக்கவுண்டம்பாளையம் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக சமையலர் பாப்பாள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒரு பிரிவினர் மனு அளித்தனர்.

திருப்பூர் : திருமளைக்கவுண்டம்பாளையம் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக சமையலர் பாப்பாள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒரு பிரிவினர் மனு அளித்தனர்.



அவினாசி அருகே உள்ள திருமளைக்கவுண்டம்பாளையம் பகுதியில் கடந்த மாதம் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பாப்பாள் என்பவர் சமைக்கக்கூடாது என ஒரு பிரிவினர் பணி செய்யவிடாமல் தடுத்தனர். இப்பிரச்சினை நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், பிரச்சினைக்குக் காரணமான 87 பேர் மீது தீண்டாமை வன்கொடுமை வழக்குப்பதிவு செய்ததோடு 8 பேர் கைது செய்யப்பட்டனர். 

இதனிடையே, ஆகஸ்ட் 7-ம் தேதி பாப்பாள் சமைத்த உணவில் பல்லி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனைச் சாப்பிட்ட 11 மாணவிகள் மற்றும் 1 மாணவர் உட்பட 12 பேர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, அவினாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சர்ச்சை எழுந்ததையடுத்து அஜாக்கிரதையாக செயல்பட்டதாக பாப்பாள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 



இந்த நிலையில், சமையலர் பாப்பாள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரி ஒரு பிரிவைச் சேர்ந்த நூற்றுக்கும்.மேற்பட்டோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...