முதலமைச்சருக்கு முகநூல் மூலம் கொலைமிரட்டல் : திருப்பூரைச் சேர்ந்தவர் கைது

திருப்பூர்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோருக்கு முகநூல் மூலம் கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.


திருப்பூர்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோருக்கு முகநூல் மூலம் கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர். 

தி.மு.க., தலைவர் கருணாநிதி கடந்த 7-ம் தேதி காலமானார். அன்று அவருக்கு மெரினாவில் இடம் ஒதுக்குவதற்காக பல்வேறு நீதிப் போராட்டங்கள் நடத்தப்பட்டது. பல்வேறு தரப்பினரும் கருணாநிதிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். இந்த நிலையில், திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராசுக்குட்டி எனும் கனகசுந்தரம் என்பவர் முகநூலில் முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா இருவரையும் விமர்சித்தும் கெட்ட வார்த்தைகளிலும் பதிவு செய்திருந்தார்.



கடந்த 8-ம் தேதி இரவு விடுத்த முகநூல் பதிவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இருவருக்கும் கொலை மிரட்டலும் விடுத்திருந்தார். இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் கணேசன் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் தெற்கு காவல் நிலைய போலீசார் கனகசுந்தரத்தை கடந்த 11-ம் தேதி கைது செய்தனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...