ஒரே மாதத்தில் 2-வது முறையாக நிரம்பி வழியும் மேட்டூர் அணை

சேலம்: தொடர் கனமழையின் காரணமாக காவிரியில் இருந்து 1.25 லட்சம் கனஅடி நீர் திறக்கப்படுவதால், ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.


சேலம்:  தொடர் கனமழையின் காரணமாக காவிரியில் இருந்து 1.25 லட்சம் கனஅடி நீர் திறக்கப்படுவதால், ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

கனமழை காரணமாக கர்நாடகாவில் உள்ள கபினி அணை கடந்த 8-ஆம் தேதி முழுக் கொள்ளளவை எட்டியது. இதனால், அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இந்த உபரி நீர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 80,000 கன அடியானது. கபினி அணை வரலாற்றில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு 80,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதேபோல, மற்றொரு அணையான கிருஷ்ணராஜ சாகர் அணையும் முழுக் கொள்ளளவை எட்டிய நிலையில், 63,000 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன்மூலம், காவிரி ஆற்றில் 1.43 லட்சம் கனஅடி நீர் பெருக்கெடுத்து வருகிறது.

இதனால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாக அதிகரித்து 1.25 லட்சம் கனஅடியாக உள்ளது. இதைத் தொடர்ந்து, பாதுகாப்பு கருதி, மேட்டூர் அணையில் இருந்து நொடிக்கு 80,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. டெல்டா பாசனத் தேவையைவிட அதிகமாக தண்ணீர் திறக்கப்படுவதால், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காவிரி கரையோர தாழ்வான பகுதிகளுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

120 அடிகொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது, முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அத்துடன், 93.47 டிஎம்சி நீர் இருப்பு கொண்ட மேட்டூர் அணையின் தற்போதைய இருப்பு 92.01 டிஎம்சி ஆக இருந்தது. நீர்வரத்து அதிகமாக இருந்ததால், இன்று இரண்டாவது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, கடந்த மாதம் 23-ம் தேதி 4 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை நிரம்பியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...