கோவையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர் கத்தியால் குத்தி கொலை

கோவை: பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபரை வழிமறித்து மர்ம நபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பாக காட்டூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை: பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபரை வழிமறித்து மர்ம நபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பாக காட்டூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டேல் வீதிகாட்டூரைச் சேர்ந்த காளியின் மகன் சரவணன் (40) என்கிற சரவணகாந்த். இவர் மேல் ரத்தினபுரி, காட்டூர், பீளமேடு, புலியகுளம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை மற்றும் கொள்ளை, ஆள் கடத்தல் போன்ற 18 வழக்குகள் உள்ளன. கடைசியாக ஆள் கடத்தல் வழக்கில் கைதாகி கடந்த 8 மாதத்திற்கு முன்பு மத்திய சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலை 7.00 மணியளவில் சரவணன் தனது இருசக்கர வாகனத்தில் (TN 38 AF 8197) சென்று கொண்டிருந்தார். அப்போது, சோமசுந்தரா மில் அருகே உள்ள ரயில்வே பாலத்திற்கு முன் இவரை ஒரு கும்பல் வழிமறித்துள்ளனர். 

அவரிடமிருந்து தப்பிக்க முயன்ற சரவணனின் மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த காட்டூர் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், சரவணனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

சரவணன் கடந்த 2004-ம் ஆண்டு பழையூர் பாப்பநாயக்கன்பாளையத்தில் இரண்டு பேரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, கத்தியோடு காவல் நிலையத்தில் சரணடைந்தார். மேலும், பீளமேடு பகுதியில் காரை ஏற்றி ஒருவரை கொலை செய்தது உட்பட 18 வழக்குகள் அவர் மீது இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...