கோவை வ.உ.சி., பூங்காவில் மாநகர காவல் ஆணையர் பெரியய்யா தலைமையில் தூய்மை பணி

கோவை: கோவை வ.உ.சி., மைதானம் மற்றும் பூங்காவில் லயன்ஸ் கிளப்புடன் கோவை மாநகர காவல்துறை இணைந்து தூய்மைப் பணியை மேற்கொண்டனர்.



கோவை: கோவை வ.உ.சி., மைதானம் மற்றும் பூங்காவில் லயன்ஸ் கிளப்புடன் கோவை மாநகர காவல்துறை இணைந்து தூய்மைப் பணியை மேற்கொண்டனர். 



கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யா தலைமையில் நடைபெற்ற இந்த தூய்மை பணியில், காவல்துறையில் உள்ள போக்குவரத்து, குற்றம், சட்டம் ஒழுங்கு என அனைத்து பிரிவுகளைச் சேர்ந்த காவலர்களும் கலந்து கொண்டனர். 



மேலும், இந்த தூய்மை பணியில் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு அங்குள்ள குப்பைகளை அகற்றினர். 



இந்த நிகழ்ச்சியின் போது மாநகர காவல் ஆணையர் பெரியய்யா கூறியதாவது :- இந்த தூய்மைப் பணியானது சிறப்பான பணியாகும். இதற்கு பொது மக்களும், தன்னார்வலர்களும் சிறப்பான ஒத்துழைப்பு அளித்தனர். 



இத்தகைய தூய்மை பணிகள் வருங்காலங்களில் பொது இடங்களான கலைக் கல்லூரி, அரசு மருத்துவமனை போன்ற இடங்களில் சிறப்பாக செய்யப்படும். அதேபோல, வ.உ.சி., மைதான ஓரத்தில் வரும் வாரங்களில் மரக்கன்றுகள் நடுவதற்கான பணியும் நடைபெறும். பொதுமக்கள் தங்களுடைய இடத்தில் உள்ள அசுத்தங்களை அகற்றி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், என்றார்.



இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர காவல் துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) லட்சுமி உள்ளிட்ட பல்வேறு காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...