வாகன ஓட்டிகள் டிஜி லாக்கரை பயன்படுத்தி போலீசாரிடம் ஆவணங்களை காண்பிக்கலாம் - மத்திய அரசு

கோவை: வாகன ஓட்டிகள் டிஜி லாக்கரை பயன்படுத்தி போலீசாரிடம் ஆவணங்களை காண்பிக்கலாம் என்று மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது.


கோவை: வாகன ஓட்டிகள் டிஜி லாக்கரை பயன்படுத்தி போலீசாரிடம் ஆவணங்களை காண்பிக்கலாம் என்று மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது.



டிஜி லாக்கர் எனப்படும் மின்னணு பெட்டகத்தில் வாகனங்களின் பதிவுச் சான்று (ஆர்சி), காப்பீடு மற்றும் வாகன ஓட்டியின் லைசென்ஸ் விவரத்தை பதிவு செய்து மின்னணு ஆவணமாக பாதுகாக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் போலீசார் தேவைப்படும்போது இந்த விவரங்களை டிஜி லாக்கரிலிருந்து பரிசோதித்துக் கொள்ள முடியும்.

மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இணைந்து கடந்த வாரம் இத்தகைய வசதியை ஏற்படுத்தியது. 

கடந்த ஆண்டு இந்த முறை அமலுக்கு வந்தது. ஆனால், இது செல்லாது என்ற வதந்தி பரவியது. இதனால், பல போலீசார் டிஜி லாக்கரில் சேமிக்கப்பட்ட ஆவணங்களை ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த நிலையில், மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. அதில், டிஜி லாக்கர் மற்றும் 'எம்பரிவாஹன்' போன்ற செயலிகள் மூலமாக வாகனத்திற்கான ஆவணங்களை காண்பிக்கும் போது அதனை போலீசார் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...