ராஜாஜி அரங்க கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ஸ்டாலின்

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி அரங்கத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று ஸ்டாலின் சந்தித்து ஆறுதல் கூறினார்.

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி அரங்கத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று ஸ்டாலின் சந்தித்து ஆறுதல் கூறினார்.



உடல் நலக்குறைவால் உயிரிழந்த கருணாநிதியின் உடல் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்த போது, பொதுமக்களுக்காக இரண்டு வழிகளும், முக்கிய பிரமுகர்கள் கருணாநிதியின் உடலை அருகில் காண வசதியாக, அரங்கின் பின்பகுதியில் பிரத்தியேகமாக வழியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆங்காங்கே தடுப்பு வேலிகள், பேரி கார்டுகள், கயிறுகள் என பல்வேறு தடுப்புகளை அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். காலை முதல் தொண்டர்களின் கூட்டம் குவியத் தொடங்கியதால், வி.ஐ.பி., வழியில் சென்று கருணாநிதியின் உடலை காணவும் தொண்டர்கள் முண்டியடித்தனர். 

பிரதமர் வந்து சென்ற வரை நிலைமை கட்டுக்குள் இருந்தது. அதன்பின் தொண்டர்கள் முண்டியடித்ததால் அரசியல் கட்சியினர், நடிகர்கள் என முக்கிய பிரமுகர்களும் நெரிசலில் சிக்கினர். வி.ஐ.பி., வழியே உள்ளே சென்றவர்களால் அதே வழியில் வெளியேறவும் முடியாத நிலை ஏற்பட்டது.



இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழ்ந்தனர். மேலும், 26 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று தி.மு.க., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும்,காயமடைந்தவர்களுக்கு ஸ்டாலின் நிதி உதவியும் வழங்கினார். அவருடன் உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் உடனிருந்தார்கள்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...