கலைஞர் என்ற நான்கே எழுத்துக்களில் ஒரு நூற்றாண்டை அடக்கலாம் : கவிஞர் வைரமுத்து கண்ணீர் பேட்டி

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டிக்கும் ராஜாஜி ஹாலுக்கு சற்று சற்று நேரத்திற்கு முன்பு கவிஞர் வைரமுத்து வந்தார். அவர் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடி பேழை அருகே சென்றதும், உணர்ச்சி மிகுதியால் கதறி அழுதார்.

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டிக்கும் ராஜாஜி ஹாலுக்கு சற்று சற்று நேரத்திற்கு முன்பு கவிஞர் வைரமுத்து வந்தார். அவர் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடி பேழை அருகே சென்றதும், உணர்ச்சி மிகுதியால் கதறி அழுதார்.

கண்ணாடி பேழை அருகே மண்டியிட்டு அழுத வைரமுத்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒருவரின் மறைவு என்பது இயற்கை என்று சிலர் கருதலாம். பெரியார் மறைவின் போது கருணாநிதி ஒரு கடிதத்தை எழுதினர். அதில், "தாஜ்மகாலுக்கு வயதாகிவிட்டது என்ற காரணத்தால் அது பூமிக்குள் புதைந்து போனால் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியுமா? அது போலத்தான் பெரியாரும்." என்று குறிப்பிட்டிருந்தார்.

தற்போது அவரது மறைவையும் அதே போலத்தான். அவரது மறைவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தலைவர் என்பதன் நிமிர்ந்த நோக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் அவர். மாபெரும் கட்சியை 5௦ ஆண்டு காலம் வழிநடத்திய பெருமையை அவர் பெற்றுள்ளார். இசைக்குடும்பத்தில் பிறந்த அவர் முத்தமிழுக்கும் பெருமை சேர்த்தார்.

போராளியாய் பிறப்பவர் படைப்பாளியாய் ஆவதில்லை. படைப்பாளி போராளியாவதில்லை. ஆனால், படைப்பாளியாகவும், போராளியாகவும், அரசனாகவும் இருந்தவர் தற்போது தேசியக்கொடி போர்த்தப்பட்டு கிடக்கிறார்." என்ற கூறி கண்ணீர் வடித்தார்.

மேலும், "35 ஆண்டுகளாக தினமும் எங்களுக்குள் காலை வேளையில் இருந்த உரையாடல் முடிந்துவிட்டது. அவர் எழுதிய புத்தகங்களை அடுக்கி வைத்தால் அவரை விட உயரமாக இருக்கும். கலைஞர் என்ற நான்கு எழுத்துக்குள் ஒரு நூற்றாண்டை அடக்கிவிட முடியும்." என்றார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...