ஜெயலலிதா நினைவு மண்டபத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் வாபஸ்

மெரீனாவில் தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைப்பதற்கு மறுப்பு தெரிவித்த தமிழக அரசு, ஜெயலலிதா நினைவு மண்டபத்திற்கு எதிராக, அதாவது, கடற்கரைப் பகுதிகளில் கட்டுமானப் பணிகளுக்கு அனுமதிக்கக் கூடாது ஆகிய வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது போன்ற சட்டசிக்கல்கள் சுட்டிக் காட்டப்பட்டன.

சென்னை: மெரீனாவில் தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைப்பதற்கு மறுப்பு தெரிவித்த தமிழக அரசு, ஜெயலலிதா நினைவு மண்டபத்திற்கு எதிராக, அதாவது, கடற்கரைப் பகுதிகளில் கட்டுமானப் பணிகளுக்கு அனுமதிக்கக் கூடாது ஆகிய வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது போன்ற சட்டசிக்கல்கள் சுட்டிக் காட்டப்பட்டன. 

மெரீனாவில் தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைப்பதற்கு மறுப்பு தெரிவித்த தமிழக அரசு, ஜெயலலிதா நினைவு மண்டபத்திற்கு எதிராக, அதாவது, கடற்கரைப் பகுதிகளில் கட்டுமானப் பணிகளுக்கு அனுமதிக்கக் கூடாது ஆகிய வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது போன்ற சட்டசிக்கல்களை சுட்டிக் காட்டப்பட்டது. 

இந்த நிலையில், மெரீனாவில் தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைப்பதற்கு ஏதுவாக, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு மண்டபத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் இன்று வாபஸ் பெறப்பட்டது. 

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த வழக்கறிஞர் துரைசாமி கூறியதாவது:- ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டப் பகுதி கடலோர ஒழுங்குமுறை ஆணையக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் உள்ளது. அதனால்தான், வழக்கு தொடர்ந்தேன். ஆனால், அண்ணா சமாதி இருக்கும் இடம் கடலோர ஒழுங்கு ஆணையக் கட்டுப்பாட்டில் கிடையாது. எனவே, கருணாநிதியின் உடலை அங்கு நல்லடக்கம் செய்வதில் எந்தப் பிரச்சனையும் இருக்காது. 

தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வேண்டுமென்றே, சட்டசிக்கல்களை காரணம் காட்டியுள்ளார். எனவே, கருணாநிதியை அடக்கம் செய்வதற்கு இடம் ஒதுக்க ஏதுவாக, ஜெயலலிதா நினைவு மண்டபத்திற்கு எதிராக நான் தொடர்ந்த 4 வழக்குகள் மற்றும் பா.ம.க.,வைச் சேர்ந்த பாலுவின் ஒரு வழக்கும் தற்போது திரும்பப் பெற்றப்பட்டுள்ளது. இதன்மூலம், சட்டசிக்கல்கள் எழ வாய்ப்பே இல்லை. என்னுடைய வழக்கை விட கருணாநிதிதான் முக்கியம், இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...