நேபாளத்தில் தவிக்கும் தமிழர்கள் : திருப்பூரைச் சேர்ந்தவர்கள் 19 பேர்

திருப்பூர்: நேபாளம் சென்ற தமிழக பக்தர்கள் இருபதிற்கும் மேற்பட்டோர் தமிழகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இதில் 10 பெண்கள் மற்றும் 9 ஆண்கள் திருப்பூரை சேர்ந்தவர்கள்.

திருப்பூர்: நேபாளம் சென்ற தமிழக பக்தர்கள் இருபதிற்கும் மேற்பட்டோர் தமிழகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இதில் 10 பெண்கள் மற்றும் 9 ஆண்கள் திருப்பூரை சேர்ந்தவர்கள்.

திருப்பூர் பெருமாநல்லூர் சாலையில் செயல்பட்டு வரும் ஆன்மிக அமைப்பு ஞானாலயா வள்ளலார் கோட்டம். இதன் தலைவர் ஶ்ரீ ஞானாலயா சுவாமிகள் தலைமையில் பத்து பெண்கள் உட்பட இருபதுக்கும் மேற்பட்டோர் கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி கைலாஷ் மானசரோவர் தரிசனத்திற்காக புறப்பட்டு சென்றனர்.

தரிசனம் முடித்து விட்டுத் திரும்பும் போது நேபாள மாநிலம் சிம்காட் என்னுமிடத்தில் நிலவிய மோசமான வானிலை காரணமாக திரும்பி வர இயலாமல் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரின் வீட்டில் கடந்த இரு நாட்களுக்கும் மேலாக தங்கியுள்ளனர்.



தற்பொழுது உணவிற்காக சிரமம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே தமிழக அரசு தாங்கள் தமிழகம் திரும்பி வர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கைலாஷ் யாத்திரை சென்ற வசந்தி என்பவரிடம் தொடர்பு கொண்டு பேசிய போது, "மோசமான வானிலை காரணமாக விமானம் வர முடியாத காரணத்தினால் கடந்த 2 நாட்களாக தமிழகம் வர முடியாமல் சிம்காட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தவித்து வருகிறோம். 

மேலும், யாத்திரை வந்தவர்கள் அனைவரும் வயதானவர்கள் என்பதால் உணவு மற்றும் தங்கும் வசதிகள் குறைவாகவே உள்ளது. எனவே, இங்கு தவித்து வரும் எங்களை தமிழக அரசு உடனடியாக மீட்டு தமிழகத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும்." என்று அவர் தெரிவித்தார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...