முதுமலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தல்

நீலகிரி: முதுமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி சாலை ஓரங்களில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நீலகிரி: முதுமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி சாலை ஓரங்களில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



நீலகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் முதுமலை சுற்றுவட்டார பகுதிகளான தெப்பக்காடு, மசினகுடி, சீகுர் மற்றும் பொக்காபுரம் போன்ற இடங்களில் வறண்டு காணப்பட்ட வன பகுதிகள் தற்போது பசுமைக்கு திரும்பி உள்ளது.

இதனால் சாலை ஓரங்களில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. யானை மற்றும் காட்டு மாடுகள் சாலை ஓரங்களில் மேய்ந்து வருகிறது. இதனால் அவ்வழியே வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



மேலும், அப்படி சாலை ஓரங்களில் இருக்கும் வன விலங்குகள் அருகில் சென்று செல்பி எடுக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், வனத்துறையினரின் அறிவிப்பை இவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள் மதிக்காமல் வன விலங்குகள் அருகே சென்று ஆபத்தை உணராமல் செல்பி மற்றும் புகைப்படங்களை எடுத்து வருகின்றனர்.



இதைத் தடுக்கும் வண்ணம் வனத் துறையினர் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...