எம்.எஸ்.எம்.இ., சட்டத்திருத்த மசோதாவை மறுபரிசீலனை செய்யக் கோரி ஆட்சியரிடம் மனு

கோவை: மத்திய அரசு தாக்கல் செய்துள்ள எம்.எஸ்.எம்.இ., சட்டத்திருத்த மசோதா சிறு, குறு தொழில்களை கடுமையாக பாதிக்கும் எனவே இதனை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி கோவை மாவட்ட சிறு, குறு தொழில் அமைப்புகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை: மத்திய அரசு தாக்கல் செய்துள்ள எம்.எஸ்.எம்.இ., சட்டத்திருத்த மசோதா சிறு, குறு தொழில்களை கடுமையாக பாதிக்கும் எனவே இதனை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி கோவை மாவட்ட சிறு, குறு தொழில் அமைப்புகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மத்திய அரசு கடந்த மாதம் 23-ம் தேதி எம்.எஸ்.எம்.இ., சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தது. ஏற்கனவே ஜி.எஸ்.டி., வரி விதிப்பினால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் நலிவடைந்து வரும் நிலையில் மத்திய அரசு முன் வைத்துள்ள இந்த சட்டத்திருத்தமானது சிறு, குறு தொழில்களை கடுமையாக பாதிக்குமென்று

சிறு குறு தொழிலாளர் தரப்பில் எதிர்ப்புகள் வந்துள்ளது.

இந்நிலையில், இந்த மசோதா தொடர்பாக கோவையில் உள்ள சிறு குறு தொழில் அமைப்புகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

 

அந்த மனுவில், மசோதாவானது, சிறு தொழிலாக பதிவு பெறுவதற்கான உச்சவரம்பை 225 கோடி ரூபாய் வரை இடமளிக்கிறது, இந்த ஷரத்தை நீக்க வேண்டும் எனவும் உச்சவரம்பை அதிகரிக்கும் பட்சத்தில் அது கார்பரேட் நிறுவனங்களுடன் சிறு குறு நிறுவனங்கள் போட்டி போட வேண்டிய சூழல் ஏற்படும். தற்போது ஒருவருக்கும் 75 கோடி ரூபாய் உச்சவரம்பே போதுமானது. எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

சிறு மற்றும் குறு நிறுவனம் என்று வகைப்படுத்துவதை விற்று முதல் ( turnover) மாறுகின்ற அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் செய்ய வேண்டுமா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். வணிகர்கள் தங்களை சிறு, குறு நிறுவனமாக பதிவு செய்துகொள்ள தடை செய்வதற்கு ஏதுவான தெளிவான விதிமுறைகளை வகுக்க வேண்டும். கோரிக்கைகளை மத்திய அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டும். என்றனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...