கோவையில் சொகுசு கார் மோதிய விபத்தில் பலியான 6 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரணம்

கோவை: கோவையில் அதிவேகமாக வந்த சொகுசு கார் பேருந்திற்காக காத்திருந்த பயணிகள் கூட்டத்திற்குள் புகுந்ததில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரணமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.


கோவை: கோவையில் அதிவேகமாக வந்த சொகுசு கார் பேருந்திற்காக காத்திருந்த பயணிகள் கூட்டத்திற்குள் புகுந்ததில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரணமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

கோவை - பொள்ளாச்சி சாலையில் சுந்தராபுரம் அருகே நேற்று ரத்தினம் என்ஜினீயரிங் கல்லூரி நிர்வாகத்திற்குச் சொந்தமான சொகுசு கார் கோவையை நோக்கி அதிவேகமாக வந்தது. இந்த கார் திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்த பயணிகள் கூட்டத்துக்குள் புகுந்தது. இந்தக் கோர விபத்தில் கல்லூரி மாணவி உள்பட 6 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

 



இந்த நிலையில், கோவையில் நிகழ்ந்த இந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை சுந்தராபுரம் பகுதியில் நிகழ்ந்த இந்த சாலை விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 3 பயணிகள் மற்றும் சாலையோரம் நின்றிருந்த கல்லூரி மாணவி உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன். இந்த விபத்தில் உயிரிழந்த 6 நபர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபவத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

விபத்தில் காயமடைந்த 3 நபர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கும், மருத்துவமனை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்த 6 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 1 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000, சாதாரண காயமடைந்தவர்களுக்கு ரூ. 25,000-ம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...