அவிநாசியை அடுத்த செங்காளிபாளையத்தில் சித்தார்த் என்ற 7 வயது சிறுவன் தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்: செங்காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன் (30). இவர் தனது வீட்டின் அருகிலேயே உள்ள விசைத்தறிக் கூடத்தில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு சிவா (9) மற்றும் சித்தார்த் (7) என இரண்டு மகன்களும் உள்ளனர்.


திருப்பூர்: செங்காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன் (30). இவர் தனது வீட்டின் அருகிலேயே உள்ள விசைத்தறிக் கூடத்தில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு சிவா (9) மற்றும் சித்தார்த் (7) என இரண்டு மகன்களும் உள்ளனர். 

சிவா மற்றும் சித்தார்த் இருவரும் நல்லகவுண்டன் பாளையத்தில் உள்ள பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தில் இரண்டாம் வகுப்பு மற்றும் நான்காம் வகுப்பு படித்து வருகின்றனர். 

இந்நிலையில் அவர்களது தாய் இந்திராணிக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் நேற்று இருவரும் பள்ளிக்கு செல்லவில்லை.

இதையடுத்து இருவரும் ஆளுக்கொரு புரமாக விளையாடிக் கொண்டிருந்தனர். மதிய உணவுக்காக வீட்டிற்கு வந்த சாமிநாதன், சித்தார்த்தை காணவில்லை என தேடியுள்ளார். கட்டிடம் கட்டுவதற்காக பயன்படுத்தப்படும் பத்து அடி ஆழமுள்ள தரைமட்ட தொட்டிக்கு அருகே சித்தார்தின் செருப்பு கிடப்பதை கண்ட சாமிநாதன், பதற்றத்துடன் சென்று தொட்டிக்குள் குதித்து பார்த்த போது சித்தார்த் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரிய வந்தது.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சிறுவனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அவிநாசி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பினர். மேலும், இது குறித்து விசாரனை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...