கோவை–பொள்ளாச்சி நான்கு வழிச்சாலை பணிகள் அடுத்தாண்டு மார்ச் மாதம் நிறைவடையும் - திட்ட மேலாளர்

கோவை: கோவை - பொள்ளாச்சி தேசிய நான்கு வழி நெடுஞ்சாலையில் தற்போது 85 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், அடுத்தாண்டு மார்ச் மாதம் பணிகள் நிறைவடையும் என்றும் அச்சாலையின் திட்ட மேலாளர் உதய் சங்கர் தெரிவித்தார்.


கோவை: கோவை - பொள்ளாச்சி தேசிய நான்கு வழி நெடுஞ்சாலையில் தற்போது 85 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், அடுத்தாண்டு மார்ச் மாதம் பணிகள் நிறைவடையும் என்றும் அச்சாலையின் திட்ட மேலாளர் உதய் சங்கர் தெரிவித்தார்.

கோவையிலிருந்து பொள்ளாச்சி வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்ல பொள்ளாச்சி சாலையை அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. அதே போல் கேரளா மாநிலம் செல்லவும் பொள்ளாச்சி பிரதான சாலையாக உள்ளது.

இதனிடையே பொள்ளாச்சியிலிருந்து கோவைக்கு வேலைக்குச் செல்ல பல ஆயிரம் பொதுமக்கள் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் பேருந்துகள் மூலம் பயணித்து வருகின்றனர். இதனால் கோவை-பொள்ளாச்சி சாலையானது மிகுந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வந்தது.

இதனைப் போக்க தேசிய நெடுஞ்சாலை துறையின் கீழ் கோவை ஈச்சனாரியில் இருந்து பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிப்பட்டி வரை 26.85 கிலோ மீட்டர் வரை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கியது. 

இந்த சாலை 36 மீட்டர் அகலத்துக்கு நான்கு வழிச்சாலையாக மாற்றப்படுகிறது. இந்த பணிக்காக ரூ.415 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த நான்கு வழிச்சாலையில் கிணத்துக்கடவு, ஒத்தக்கால்மண்டபம், ஈச்சனாரி, முள்ளுபாடி ஆகிய நான்கு இடங்களில் மேம்பாலங்கள் வரவுள்ளன.

இதனிடையே ஈச்சனாரியை தவிர்த்து மற்ற இடங்களில் பால பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துவிட்டன.

ஈச்சனாரி விநாயகர் கோவில் கோவை மக்களிடையே மிகவும் பிரபலமானது. அந்த கோவிலை இடிக்காமல் பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதன் தொடர்ச்சியாக ஈச்சனாரி கோவிலை இடிக்காமல் பாலம் கட்ட தேசிய நெடுஞ்சாலை அனுமதி வழங்கியது.

இது குறித்து திட்ட மேலாளர் உதய் சங்கர் கூறுகையில், "ஈச்சனாரி மேம்பாலம் கட்ட ரூபாய் 36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாத காலத்துக்குள் இந்த பணிகள் தொடங்கப்படும். ஈச்சனாரியில் 1 கிலோ மீட்டர் தூரம் மேம்பாலம் கட்டப்படும். கிருஷ்ணா கோவில் அருகே பாலம் தொடங்கி, ஈச்சனாரி கோவில் தாண்டு 350 மீட்டர் தூரம் அளவில் பாலம் முடிவு பெறும்.

26.85 கிலோ மீட்டர் தூரத்தில் தற்போது 18 கிலோ மீட்டர் தூரம் வரையிலான பணிகள் நிறைவடைந்துவிட்டன. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் அனைத்துப் பணிகளும் நிறைவடையும். கான்கிரீட் சாலை அமைப்பதால் பராமரிப்பு செலவு மிச்சமாகும்."என்றார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...