உதகை காந்தி மைதானத்தில் குவிந்து கிடக்கும் கழிவுகள்: விளையாட்டு வீரர்கள் வேதனை

நீலகிரி: உதகை காந்தி மைதானத்தில் குவியும் குப்பைகளால் அங்கு செல்லும் விளையாட்டு வீரர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

நீலகிரி:  உதகை காந்தி மைதானத்தில் குவியும் குப்பைகளால் அங்கு செல்லும் விளையாட்டு வீரர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்குச் சொந்தமான பள்ளி விளையாட்டு மைதானம் ஏ.டி.சி.,யில் உள்ளது. இந்த மைதானத்தை பல பள்ளிகளின் மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.



சமீபத்தில் இந்த மைதானம் சீரமைக்கப்பட்டு, புதிய 'கேட்' அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கோடை சீசன் சமயத்தில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இந்த மைதானத்தை 'பார்க்கிங்' தளமாக மாற்றியதால், குண்டும் குழியுமாக மாறியது.

தற்போது, கோடப்பமந்து கால்வாயில் அகற்றப்பட்ட சகதிகள் இந்த மைதானத்தில் ஆங்காங்கே கொட்டப்பட்டு, திறந்த வெளி கழிப்பிடமாகவும், குப்பை மேடாகவும் மாறி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.



மேலும், இரவில் இங்கு தங்கும் மக்களாலும், இப்பகுதி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், பள்ளி மாணவர்கள் மற்றும் வார விடுமுறை நாட்களில் பயிற்சி மேற்கொள்ள வரும் விளையாட்டு வீரர்கள் இந்த மைதானத்தின் அவல நிலையைப் பார்த்து வேதனை அடைந்துள்ளனர்.

இந்த மைதானத்தை உடனடியாக தூய்மைப்படுத்தி முறையாகப் பராமரிக்க வேண்டும் என்று விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...