அடையாளம் தெரியாத வாகனம் மோதி தலைமை பெண் காவலர் படுகாயம்

கோவை: மேட்டுப்பாளையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தலைமை பெண் காவலர் படுகாயம் அடைந்தார்.

கோவை: மேட்டுப்பாளையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தலைமை பெண் காவலர் படுகாயம் அடைந்தார்.

அன்னூர் காவல்நிலையத்தில் தலைமை காவலராகப் பாக்கியம் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் வழக்கு ஒன்றிற்காக நீதிமன்றப் பணியினை மேற்கொள்ள இன்று மதியம் மேட்டுப்பாளையத்தில் உள்ள நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். வழக்கு சம்பந்தமான நீதிமன்றப் பணியினை முடித்து விட்டு, மாலை சிறுமுகை சாலை வழியாக அன்னூருக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். 

இந்த நிலையில், சிறுமுகை சாலையில் உள்ள அறிவொளி நகர் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி அவர் படுகாயமடைந்தார். தலை மற்றும் கால், கை என உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை, அப்பகுதி மக்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

இந்த விபத்து குறித்து மேட்டுப்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...