திருப்பூரில் மனிதநேயம் மறந்த மருத்துவமனை ; மனிதநேயம் காத்த திருநங்கை

திருப்பூர்: திருப்பூர் அருகே தனியார் மருத்துவமனை எதிரே நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு முதலுதவி அளிக்க மருத்துவ நிர்வாகம் முன்வராத நிலையில், அந்த வழியாகச் சென்று கொண்டிருந்த திருநங்கையின் மனிதநேயம் அனைவரையும் நெகிழு வைத்தது.

திருப்பூர்: திருப்பூர் அருகே தனியார் மருத்துவமனை எதிரே நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு முதலுதவி அளிக்க மருத்துவ நிர்வாகம் முன்வராத நிலையில், அந்த வழியாகச் சென்று கொண்டிருந்த திருநங்கையின் மனிதநேயம் அனைவரையும் நெகிழு வைத்தது. 



திருப்பூரைச் சேர்ந்த பழனிசாமி தனது மனைவி சரஸ்வதியுடன் இருசக்கர வாகனத்தில் பழைய பேருந்து நிலையம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்து சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், சரஸ்வதி நிலை தடுமாறி கீழே விழுந்ததில், பேருந்தின் பின் சக்கரம் அவரது இடதுகால் மீது ஏறியது. இந்த விபத்தில் அவரது கால் நசுங்கியது. சம்பவ இடத்தில் சென்று கொண்டிருந்த திருநங்கை ஒருவர் சரஸ்வதியை உடனடியாக சாலையின் ஓரம் இழுத்து தண்ணீர் கொடுத்துக் காப்பாற்றினார். 

விபத்து நடந்த இடத்திலிருந்து வெறும் 20 மீட்டர் தொலைவில் ஏ.எம்.சி., எனும் தனியார் மருத்துவமனை இருந்தும், விபத்தையறிந்து முதலுதவி அளிக்கக்கூட யாரும் முன்வரவில்லை. சிறிதுநேரம் கழித்து தகவலின் பேரில் வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் சரஸ்வதி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சாலை விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு முதலுதவி அளிக்கத் தனியார் மருத்துவமனை நிர்வாகம் முன்வராத நிலையில், விபத்தில் சிக்கியவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் வரை அந்த திருநங்கை சம்பவ இடத்திலேயே இருந்தது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...