உலக நன்மை வேண்டி மேட்டுப்பாளையத்தில் 1,008 திருவிளக்கு பூஜை

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பருவமழை பெய்யவும், உலக நன்மை வேண்டியும் 1,008 திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது.

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பருவமழை பெய்யவும், உலக நன்மை வேண்டியும் 1,008 திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது.

கோவை, நீலகிரி மாவட்டத்தின் பல இடங்களில் நல்ல மழை பெய்த போதும், மேட்டுப்பாளையத்தில் இந்தாண்டு போதிய மழை பொழிவு என்பது இல்லை. மழை காரணமாக மாவட்டத்தின் பல இடங்களில் நீர்நிலைகள் நிரம்பியுள்ள நிலையில், மேட்டுப்பாளையம் பகுதிகளில் இருக்கும் குளம், குட்டைகள் வறண்டு காணப்படுகின்றன.இதனால், விவசாய பணிகளுக்கு போதிய நீர் ஆதாரம் கிடைக்காத நிலையில், பருவ மழை நன்கு பொழிய வேண்டியும், உலக நன்மை வேண்டியும் மேட்டுப்பாளைய பகுதி பெண்கள் கலந்து கொண்ட 1,008 திருவிளக்கு வனபூஜை நடைபெற்றது.



மேட்டுப்பாளையம் வன பத்திரகாளியம்மன் கோவிலில் நடைபெற்ற இந்தப் பூஜையில், தமிழ் முறைப்படி சிவாச்சாரியர்கள் மந்திரங்கள் உச்சரித்து பொதுமக்கள் குங்குமம் மற்றும் மலர்களால் அர்ச்சனை செய்து அம்மனுக்கு வழிபாடு நடத்தினர். மேலும், மழை வேண்டி வருண பகவானுக்கும் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...