உதகையில் காட்டெருமை தாக்கியதில் ஒருவர் படுகாயம் : கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை

நீலகிரி: உதகை அருகே காட்டெருமை தாக்கியதில் படுகாயம் அடைந்தவர், மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

நீலகிரி: உதகை அருகே காட்டெருமை தாக்கியதில் படுகாயம் அடைந்தவர், மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.



மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் யானை, காட்டெருமை, புலி, சிறுத்தை, கரடி போன்ற வன விலங்குகளின் புகழிடமாக இருந்து வரும் நிலையில், தண்ணீர் மற்றும் உணவு தேடி அவை ஊருக்குள் வருவது வாடிக்கையாக உள்ளது. இவ்வாறு வரும் வனவிலங்குகள் பயிர்கள் மற்றும் குடியிருப்புகளை சேதப்படுத்துவதால், அதை விரட்ட மனிதர்கள் முற்படும் போது, மனித வனவிலங்குகள் மோதல் ஏற்பட்டு, உயிர்சேதம் ஏற்படுகிறது. 



இந்த நிலையில், உதகையை அடுத்த கொல்லிமலை கிராமத்தில் வசித்து வருபவர் பாலசுப்ரமணியம் (60). இவர், இன்று தோட்ட வேலைக்கு சென்றுள்ளார். மீண்டும் மதிய உணவை முடித்து விட்டு, வேலைக்கு செல்லும் போது அங்கு உலா வந்த காட்டெருமை இவரை தாக்கியது. இதில், பலத்த காயமடைந்த பாலசுப்ரமணியத்தின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை உதகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக மருத்துவர்கள் பரிந்துரைத்ததால், அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். 

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...