நாற்பது சதவீத தாய்மார்களே தாய்ப்பால் கொடுக்கின்றனர்: கோயமுத்தூர் பேரெண்டிங் நெட்வொர்க் நடத்திய ஆய்வில் தகவல்

கோவை: கடந்த ஆறு மாத கணக்கெடுப்பின் படி நாற்பது சதவீதம் தாய்மார்களே தாய்ப்பால் கொடுத்த வருவதாக கோயமுத்தூர் பேரெண்டிங் நெட்வொர்க் என்ற தனியார் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.


கோவை: கடந்த ஆறு மாத கணக்கெடுப்பின் படி நாற்பது சதவீதம் தாய்மார்களே தாய்ப்பால் கொடுத்த வருவதாக கோயமுத்தூர் பேரெண்டிங் நெட்வொர்க் என்ற தனியார் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் அனுசரிக்கப்படுவதின் ஒரு பகுதியாக கோயமுத்தூர் பேரெண்டிங் நெட்வொர்க் என்ற தனியார் தொண்டு நிறுவனம் தங்கள் அமைப்பு மூலம் செயல்படுத்த படும் சேவைகள் குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு பிரஸ் கிளப்பில் நடைபெற்றது.

இது தொடர்பாக (breast feeding counsellor) தாய்ப்பால் ஆலோசகர் ஸ்வாதி ஜெகதீசன் கூறியதாவது:-



தாய்ப்பாலின் மகத்துவத்தை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இந்த அமைப்பு தொடங்கபட்டது.

உயிர்துளி என்று பெயர் சூட்டப்பட்டு தற்போது பேஸ்புக், வாட்ஸ்-ஆப் ஆகியன மூலம் 5000-க்கும் மேற்பட்டோரை இணைத்துள்ளோம். மாதந்தோறும் 10 பேரிடம் தாய்ப்பால் பெறப்பட்டு அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், இவ்வாறு பெறப்படும் தாய்ப்பால் அனாதையாக விடப்படும் குழந்தைகள் மற்றும் பால் சுரப்பு குறைவாக உள்ள தாய்மார்களின் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து தற்போது மக்களிடையே அதிகமான விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது.

மேலும், சந்தேகம் எழும் தாய்மார்களுக்கு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது. கடந்த ஆறு மாத கணக்கெடுப்பின் படி நாற்பது சதவீதம் தாய்மார்களே தாய்ப்பால் கொடுத்து வருகின்றனர். எழுபது, எண்பதுகள் வரை தாய்ப்பால் முறையாக இருந்து வந்தது.

இதன் பின்னர் பாட்டில்களில் பால் கொடுக்கும் முறை வந்த பிறகே தாய்ப்பால் கொடுப்பது குறைந்து விட்டது. இதன் மகத்துவத்தை பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வரும் 4 மற்றும் 5-ம் தேதி ப்ரோசோன் மாலில் குழந்தைகளுடன் தாய்-சேய் நடனம் நடத்த உள்ளோம். என்று அவர் கூறினார்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...