நீலகிரியில் துப்புரவு பணியாளர்களுக்கு 4 மாதங்களாக பணி வழங்கவில்லை என்று புகார் : ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

நீலகிரி: நெல்லியாளம் நகராட்சியில் பணி புரியும் ஒப்பந்தத் துப்புரவு பணியாளர்களுக்கு கடந்த 4 மாதங்களாக பணி வழங்கவில்லை என்று கூறி இன்று பணியாளர்கள் தங்களது குடும்ப அட்டை, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

நீலகிரி: நெல்லியாளம் நகராட்சியில் பணி புரியும் ஒப்பந்தத் துப்புரவு பணியாளர்களுக்கு கடந்த 4 மாதங்களாக பணி வழங்கவில்லை என்று கூறி இன்று பணியாளர்கள் தங்களது குடும்ப அட்டை, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட நெல்லியாளம் நகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக 28 பேர் ஒப்பந்தத் துப்புரவு பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.

கூடலூரைச் சேர்ந்த தனியார் ஒப்பந்த நிறுவனம் இவர்களுக்கு முறையான ஊதியம் வழங்குவதில்லை, வருங்கால வைப்பு நிதி மற்றும் மருத்துவ காப்பீடு எதையும் முறையாக வழங்குவதில்லை என பல முறை மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்ததாகக் கூறும் இவர்கள், கடந்த 4 மாதங்களாக 28 பேருக்கும் பணி வழங்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.



இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தங்களது குழந்தைகளின் கல்வியும் பாதிக்கப்படுவதாகவும் கூறி இன்று தங்களது குடும்ப அட்டை, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் நோக்கில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதனையடுத்து, அவர்களை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சண்முக பிரியா அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் வரும் 1-ம் தேதி முதல் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து, அவர்கள் திரும்பி சென்றனர்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...