காவேரி மருத்துவமனைக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் வருகை

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து கேட்டறிவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் காவேரி மருத்துவமனை விரைந்துள்ளனர்.


சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து கேட்டறிவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் காவேரி மருத்துவமனை விரைந்துள்ளனர். 



தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவசர சிகிச்சை பிரிவில், 8 மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில், காவரி மருத்துவமனையும் அவரது உடல்நலம் குறித்து தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. 

அந்த வகையில், நேற்றிரவு வெளியிடப்பட்ட 4-வது அறிக்கையில், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது, சிகிச்சைக்குப்பின் உடல்நிலை சீராக உள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சேலத்தில் இன்று பங்கேற்கவிருந்த அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு கோவையில் இருந்து விமானம் மூலம் நேற்று நள்ளிரவு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் சென்னை திரும்பினார். 



இந்த நிலையில், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து கேட்டறிவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் காவேரி மருத்துவமனை விரைந்துள்ளனர். அவர்களுடன் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், செங்கோட்டையன், சிவி சண்முகம் உள்ளிட்டோரும் சென்றுள்ளனர். 

கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிவதற்காக ஏற்கனவே அங்கு தொண்டர்கள் குவிந்து உள்ளதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...