உலக புலிகள் தினம்: உதகையில் பழங்குடியின மக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு புலியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

நீலகிரி: உலக புலிகள் தினத்தை முன்னிட்டு இன்று உதகையில் பழங்குடியின மக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு புலியின் அவசியம் குறித்து காணொளி காட்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நீலகிரி: உலக புலிகள் தினத்தை முன்னிட்டு இன்று உதகையில் பழங்குடியின மக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு புலியின் அவசியம் குறித்து காணொளி காட்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் சுமார் 55 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். இந்த வனப்பகுதிகளில் புலி, சிறுத்தை, யானை, மான், காட்டெருமை போன்ற வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. 

இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளில் இருந்த புலிகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வந்தது. இதனையடுத்து புலிகளை பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 29-ம் உலக புலிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.



இதனையொட்டி, இன்று உதகை கேர்ன்ஹில் வனப்பகுதியில் மாவட்ட வனத்துறை சார்பில் பழங்குடியின மக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் புலிகளின் அவசியம் குறித்தும், புலி வனத்தில் ஏன் இருக்க வேண்டும்? என்பதை உணர்த்தும் வகையில் காணொளி காட்சி மூலம் எடுத்துரைக்கப்பட்டது.



தற்போது இந்தியாவில் 2,226 புலிகள் உள்ளதாக கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளதாகவும், நீலகிரியில் 120 முதல் 130 புலிகள் உள்ளதாக கணக்கெடுப்பில் தகவல் உள்ளதாகவும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...