கருணாநிதியின் உடல் நிலையை நினைத்து உடுமலையில் தி.மு.க தொண்டர் மாரடைப்பால் மரணம்

உடுமலை: மடத்துக்குளம் அருகே பாப்பான்குளம் ஊராட்சியைச் சேர்ந்த தி.மு.க., தொண்டர், கட்சியின் தலைவரான கருணாநிதியின் உடல்நிலை சரியில்லாமல் போனதை நினைத்து மாரடைப்பால் மரணமடைந்தார்.


உடுமலை: மடத்துக்குளம் அருகே பாப்பான்குளம் ஊராட்சியைச் சேர்ந்த தி.மு.க., தொண்டர், கட்சியின் தலைவரான கருணாநிதியின் உடல்நிலை சரியில்லாமல் போனதை நினைத்து மாரடைப்பால் மரணமடைந்தார். 

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் பாப்பான்குளம் ஊராட்சியைச் சேர்ந்தவர் சபரிகிரிநாதன் என்கின்ற செந்தில் (42). இவர் பாப்பான்குளம் ஊராட்சியின் 5-வது வார்டு தி.மு.க., பகுதி செயலாளராக இருந்தார்.



திருமணமான இவருக்கு குழந்தைகள் இல்லை. கடந்த இரண்டு நாட்களாக தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல் நிலை சரியில்லாமல் போனதால் அவரை பற்றிய கவலையில் ஆழ்ந்துள்ளார் செந்தில். மேலும், வீட்டில் தனது தலைவருக்கு இப்படி ஆகிவிட்டதே என்று தனது மனைவியிடம் புலம்பியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று அதிகாலையில் திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. தொடர்ந்து, அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார்.



தற்போது அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு, கட்சித் தொண்டகள் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...