வால்பாறையில் கோவிலில் அம்மன் தாலி மற்றும் உண்டியல் பணம் திருட்டு

கோவை: வால்பாறையில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அம்மன் தாலி மற்றும் உண்டியல் பணத்தை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: வால்பாறையில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அம்மன் தாலி மற்றும் உண்டியல் பணத்தை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வால்பாறை அருகே உள்ள எம்.ஜி.ஆர் நகரில் அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் பூட்டைத் திறந்து நேற்று இரவு உள்ளே சென்ற மர்ம நபர்கள் அம்மனுக்கு அணிவித்திருந்த தாலி, வெள்ளி கிரீடம் மற்றும் உண்டியல் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

மேலும், கோவிலின் அருகே உள்ள ஹோமியோபதி கிளினிக்-க்குள் புகுந்து அங்கிருந்த பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர். காலையில் கோவில் பூசாரி வந்து பார்க்கும் போது, இக்கொள்ளைச் சம்பவம் நடந்தது தெரியவந்தது.



இது தொடர்பாக, வால்பாறை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததன் பேரில், அங்கு சென்ற போலீசார் அங்குள்ள சி.சி.டி.வி காமிரா காட்சிகளைப் பார்வையிட்டனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த, காமிராவில் அங்கு இரண்டு சிறுத்தை புலிகள் நடமாடும் காட்சியும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...