உதகையில் தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம்

நீலகிரி: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய வியாபார நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு உதகை நகராட்சி ரூ. 22,000 அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

நீலகிரி: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய வியாபார நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு உதகை நகராட்சி ரூ. 22,000 அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. 

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக்கை கொண்டுள்ள டம்ளர், தட்டுகள் போன்றவற்றிற்கு தடை செய்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார். இதனால், மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் வியாபார நிறுவனங்கள் மற்றும் மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில், நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து சோதனை நடத்தி, அபராதம் விதித்து வந்தது.

இந்நிலையில், உதகை நகரில் இன்று நகராட்சி ஆணையாளர் ரவி (பொறுப்பு) தலைமையில் அதிகாரிகள் பிளாஸ்டிக் தடுப்பு சோதனையை நடத்தினர். அப்போது, இதில், பல வியாபார நிறுவனங்கள் மற்றும் கடைகளில் தடையை மீறி பயன்படுத்தி வந்த பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். 



இன்று நடைபெற்ற இந்த சோதனையில் சுமார் ரூ. 22,000 அபராதம் வசூலிக்கப்பட்டு, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என நகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தினார்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...