காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேரில் சென்று கேட்டறிந்தார்.
காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேரில் சென்று கேட்டறிந்தார்.
தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு நேற்று முன்தினத்தில் இருந்து உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு மீண்டும் அவரது உடல்நிலை மோசமானதால், ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அவர் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். முதற்கட்ட சிகிச்சைக்குப் பிறகு கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

ரத்த அழுத்தக் குறைவு காரணமாக கருணாநிதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும், தீவிர மருத்துவ சிகிச்சைக்கு பிறகு ரத்த அழுத்தம் சீராக உள்ளதாகவும் காவேரி மருத்துவமனை தெரிவித்தது.
இந்நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை காவேரி மருத்துவமனைக்கு சென்றார். மருத்துவமனையில் இருந்த ஸ்டாலினை சந்தித்த அவர், கருணாநிதியின் உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். அப்போது, கருணாநிதியின் உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் இருப்பதாக ஸ்டாலின் தெரிவித்தார். துரைமுருகன், கனிமொழி, செல்வி, திருச்சி சிவா, ஆ.ராசா ஆகியோரும் இன்று மருத்துவமனைக்கு சென்றனர். கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிந்து கொள்வதற்காக மருத்துவமனைக்கு வெளியே ஏராளமான தொண்டர்களும் திரண்டுள்ளனர்
தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு நேற்று முன்தினத்தில் இருந்து உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு மீண்டும் அவரது உடல்நிலை மோசமானதால், ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அவர் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். முதற்கட்ட சிகிச்சைக்குப் பிறகு கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

ரத்த அழுத்தக் குறைவு காரணமாக கருணாநிதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும், தீவிர மருத்துவ சிகிச்சைக்கு பிறகு ரத்த அழுத்தம் சீராக உள்ளதாகவும் காவேரி மருத்துவமனை தெரிவித்தது.
இந்நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை காவேரி மருத்துவமனைக்கு சென்றார். மருத்துவமனையில் இருந்த ஸ்டாலினை சந்தித்த அவர், கருணாநிதியின் உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். அப்போது, கருணாநிதியின் உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் இருப்பதாக ஸ்டாலின் தெரிவித்தார். துரைமுருகன், கனிமொழி, செல்வி, திருச்சி சிவா, ஆ.ராசா ஆகியோரும் இன்று மருத்துவமனைக்கு சென்றனர். கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிந்து கொள்வதற்காக மருத்துவமனைக்கு வெளியே ஏராளமான தொண்டர்களும் திரண்டுள்ளனர்