தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்து நடத்த அதிகாரிகளுடன் பேச்சு: வேதாந்தா தகவல்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் மூடப்பட்டு கிடக்கும் காப்பர் உருக்காலையை மீண்டும் திறந்து நடத்துவதற்காக விரைந்து ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஸ்டெர்லைட் ஆலையின் அன்னை நிறுவனமாகிய வேதாந்தா லிமிடெட் அறிவித்துள்ளது.


தூத்துக்குடி: தூத்துக்குடியில் மூடப்பட்டு கிடக்கும் காப்பர் உருக்காலையை மீண்டும் திறந்து நடத்துவதற்காக விரைந்து ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஸ்டெர்லைட் ஆலையின் அன்னை நிறுவனமாகிய வேதாந்தா லிமிடெட் அறிவித்துள்ளது.



தூத்துக்குடி தாமிர உருக்காலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் உத்தரவு பிறப்பித்தது.



துவக்கத்தில் ஆண்டு பராமரிப்பு பணிக்காக ஆலை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மாநில அரசு உத்தரவுகள் காரணமாக ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டதாக வேதாந்தா நிறுவனம் தன்னுடைய 2017-18 ஆண்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.



தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்து நடத்த சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை துவக்கி இருப்பதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.



தமிழக அரசின் நிரந்தர மூடல் ஆணைக்கு எதிராக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது. மேல்முறையீட்டு மனுவின் மீது கருத்து கூறும்படி தமிழக அரசுக்கும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஆணை அனுப்பி உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலையின் உரிமம் புதுப்பிக்க தாக்கல் செய்த மனுவை நிராகரித்து விட்டது. அதைத் தொடர்ந்து மே மாதம் 28 ஆம் தேதி மாநில அரசு நிரந்தர மூடல் ஆணையை வெளியிட்டது. ஆலை விரிவாக்க பணிகளுக்காக வழங்கிய நில ஒதுக்கீட்டையும் தமிழக அரசு ரத்து செய்தது.

அதன் காரணமாக ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சீல் வைத்தது.

உருக்கு கம்பிகள்

இந்தியாவில் மின்துறைக்கு தேவையான இரும்பு, உருக்கு பொருள்களுக்கு பெரும் தேவை உள்ளது. அதற்கான சந்தை வாய்ப்புகளும் சிறப்பாக உள்ளன. ஜார்கண்ட் மாநிலத்தில் இரும்பு தாது பெருமளவில் கிடைக்கிறது. அதனை தொழில்முறைப்படுத்தி தேவைக்கேற்ப இரும்பு உருக்கு வகைகளாக உற்பத்தி செய்யலாம் என வேதாந்தா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...