மனிதர்களின் அத்துமீறிய செயல்களால் சிங்காநல்லூர் குளத்தைத் தவிர்க்கும் பறவைகள்

கோவை : மனிதர்களின் அத்துமீறிய செயல்களால் கோவை சிங்காநல்லூர் குளத்தில் இருந்து பிற குளங்களுக்கு விரட்டியடிக்கப்படும் சம்பவம் பறவைகள் ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : மனிதர்களின் அத்துமீறிய செயல்களால் கோவை சிங்காநல்லூர் குளத்தில் இருந்து பிற குளங்களுக்கு விரட்டியடிக்கப்படும் சம்பவம் பறவைகள் ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.



கடந்த சில நாட்களாகக் கோவையில் பெய்த தென்மேற்கு பருவமழையினால் சிங்காநல்லூர் குளம் நிரம்பி வழிகிறது. இதனால், பறவைகள் வரத்து குறைந்து, ஒரு பாலைவனம் போல அந்தக் குளம் காட்சியளிக்கிறது. பொதுவாக பறவை இனங்கள் அதிகளவு காணப்படும் இடமாக கோவை சிங்காநல்லூர் குளம் திகழ்ந்து வந்தது. அங்கிருந்து பறந்து செல்லும் சில பறவைகளினால் வாலாங்குளத்தில் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 



சிங்காநல்லூர் குளத்தில் பறவைகள் குறைந்து காணப்படுவதற்கு சட்டவிரோதமாக அங்கு மீன்பிடிக்கும் பணிகளே காரணம் என தகவல்கள் கூறுகின்றன. மீனவர்கள் நீண்ட குச்சிகளை வைத்து நீரில் அடித்து மீன்களைப் பிடிப்பது, குளத்தில் இருக்கும் உணவுகளைப் பறவைகள் எடுப்பதற்கு வழியில்லாமல், குளம் முழுவதும் வலைகளை பரவச் செய்திருப்பது போன்ற அத்துமீறிய செயல்களில் ஈடுபடுகின்றனர். மனிதர்களின் இது போன்ற நடவடிக்கைகளினால் பறவைகள் உணவுக்காக சிங்காநல்லூர் குளத்தை தவிர்த்து, வாலாங்குளத்தை நோக்கி படையெடுக்கின்றனர்.



இதனிடையே, குளத்தின் நீர்மட்டம் அதிகரிப்பினாலும், மரங்கள் மற்றும் மூட்டைகளால் குளம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது போன்ற காரணங்களால் சிங்காநல்லூர் குளத்தில் பறவைகள் குறைந்து காணப்படுவதற்கான காரணம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 



Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...