மின்வாரியம் 3 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பில் செயல்படுகிறது - அமைச்சர் தங்கமணி

திருப்பூர்: திருப்பூரில் கோவை மண்டல மின்வாரிய அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை.ராதாகிருஷ்ணன், மின்வாரியம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் தங்கமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

திருப்பூர்: திருப்பூரில் கோவை மண்டல மின்வாரிய அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை.ராதாகிருஷ்ணன், மின்வாரியம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் தங்கமணி ஆகியோர் கலந்துகொண்டனர். 

ஆய்வுக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கமணி, "மின்வாரியத்தில் கடந்த காலங்களில் 14 ஆயிரம் கோடி நஷ்டம் என்பது தற்போது 3 ஆயிரம் கோடியாக உள்ளது.



விரைவில் லாபமூட்டக்கூடிய வகையில் செயல்படும். டவர் லைன் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அவர்களுடன் சுமூக பேச்சுவார்த்தை நடத்தி அதன் பிறகே செயல்படுத்தப்படும்.

கொள்கை ரீதியில் எதிர்க்கட்சியானாலும், அரசியல் நாகரீகம் கருதி கலைஞரைச் சந்தித்து உடல் நலம் விசாரித்தோம். தமிழகத்தில் 6,718 மதுபானக் கடைகள் இருந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் வருடம் 500 கடைகளை அடைப்போம் என்று வாக்குறுதி அளித்தார்.

தற்போது 3,886 மதுபானக் கடைகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. கடந்தாண்டு விவசாயிகளுக்கு தட்கல் முறையில் 9,946 வழங்கக் கூடிய மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மின்சார வாரியம் வெளிப்படைத்தன்மையோடு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது." என்றார்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...