திருப்பூர்: திருப்பூரில் கோவை மண்டல மின்வாரிய அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை.ராதாகிருஷ்ணன், மின்வாரியம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் தங்கமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.
திருப்பூர்: திருப்பூரில் கோவை மண்டல மின்வாரிய அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை.ராதாகிருஷ்ணன், மின்வாரியம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் தங்கமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆய்வுக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கமணி, "மின்வாரியத்தில் கடந்த காலங்களில் 14 ஆயிரம் கோடி நஷ்டம் என்பது தற்போது 3 ஆயிரம் கோடியாக உள்ளது.

விரைவில் லாபமூட்டக்கூடிய வகையில் செயல்படும். டவர் லைன் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அவர்களுடன் சுமூக பேச்சுவார்த்தை நடத்தி அதன் பிறகே செயல்படுத்தப்படும்.
கொள்கை ரீதியில் எதிர்க்கட்சியானாலும், அரசியல் நாகரீகம் கருதி கலைஞரைச் சந்தித்து உடல் நலம் விசாரித்தோம். தமிழகத்தில் 6,718 மதுபானக் கடைகள் இருந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் வருடம் 500 கடைகளை அடைப்போம் என்று வாக்குறுதி அளித்தார்.
தற்போது 3,886 மதுபானக் கடைகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. கடந்தாண்டு விவசாயிகளுக்கு தட்கல் முறையில் 9,946 வழங்கக் கூடிய மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மின்சார வாரியம் வெளிப்படைத்தன்மையோடு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது." என்றார்.
ஆய்வுக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கமணி, "மின்வாரியத்தில் கடந்த காலங்களில் 14 ஆயிரம் கோடி நஷ்டம் என்பது தற்போது 3 ஆயிரம் கோடியாக உள்ளது.

விரைவில் லாபமூட்டக்கூடிய வகையில் செயல்படும். டவர் லைன் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அவர்களுடன் சுமூக பேச்சுவார்த்தை நடத்தி அதன் பிறகே செயல்படுத்தப்படும்.
கொள்கை ரீதியில் எதிர்க்கட்சியானாலும், அரசியல் நாகரீகம் கருதி கலைஞரைச் சந்தித்து உடல் நலம் விசாரித்தோம். தமிழகத்தில் 6,718 மதுபானக் கடைகள் இருந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் வருடம் 500 கடைகளை அடைப்போம் என்று வாக்குறுதி அளித்தார்.
தற்போது 3,886 மதுபானக் கடைகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. கடந்தாண்டு விவசாயிகளுக்கு தட்கல் முறையில் 9,946 வழங்கக் கூடிய மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மின்சார வாரியம் வெளிப்படைத்தன்மையோடு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது." என்றார்.