திருப்பூர்: திருப்பூர் அருகே வீட்டில் வைத்து பிரசவம் பார்த்ததில், பெண் உயிரிழந்தது தொடர்பாக அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்: திருப்பூர் அருகே வீட்டில் வைத்து பிரசவம் பார்த்ததில், பெண் உயிரிழந்தது தொடர்பாக அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.
புதுப்பாளையம் ரத்னகிரீஸ்வரன் நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (34). பனியன் வர்த்தக நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி கிருத்திகா (28) தனியார் பள்ளி ஆசிரியை.
இந்த தம்பதிக்கு, டிமானி என்ற மூன்று வயதான பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், மீண்டும் கர்ப்பம் தரித்த கிருத்திகா-க்கு, கடந்த 22-ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது.
அப்போது, கார்த்திகேயனின் நண்பர் பிரவீன், அவரது மனைவி லாவண்யாவுக்கு இயற்கை முறையில் வீட்டில் வைத்து பிரசவம் பார்த்தது அந்த தம்பதியினருக்கு தெரியவந்தது.
தொடர்ந்து கிருத்திகாவுக்கும் அதே முறையில் பிரசவம் பார்க்க கார்த்திகேயன் திட்டமிட்டார். அதன்படி, பிரசவம் பார்த்ததில் 3.5 கிலோ எடையில் அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது.
ஆனால், அதன் பிறகே அதிர்ச்சி காத்திருந்தது. பிரசவம் முடிந்த சிறிது நேரத்தில் கிருத்திகாவுக்கு ரத்தப்போக்கு அதிகமாகி மயக்கமடைந்தார்.
அவரை, 108 ஆம்புலன்சில் திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது. குழந்தை பிறந்த சில மணி நேரங்களில், தாய் உயிரிழந்தது அனைத்துத் தரப்பினரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இது தொடர்பாக, கார்த்திகேயன் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 304-ன் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், இன்று அவரை கைது செய்துள்ளனர்.
பெற்ற தாய் இறந்த போக, தந்தை கைதாகி சிறைக்கு செல்ல, பச்சிளம் குழந்தையும், மூன்று வயது பெண் குழந்தையும் பரிதாபித்து நிற்கின்றனர்.
புதுப்பாளையம் ரத்னகிரீஸ்வரன் நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (34). பனியன் வர்த்தக நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி கிருத்திகா (28) தனியார் பள்ளி ஆசிரியை.
இந்த தம்பதிக்கு, டிமானி என்ற மூன்று வயதான பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், மீண்டும் கர்ப்பம் தரித்த கிருத்திகா-க்கு, கடந்த 22-ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது.
அப்போது, கார்த்திகேயனின் நண்பர் பிரவீன், அவரது மனைவி லாவண்யாவுக்கு இயற்கை முறையில் வீட்டில் வைத்து பிரசவம் பார்த்தது அந்த தம்பதியினருக்கு தெரியவந்தது.
தொடர்ந்து கிருத்திகாவுக்கும் அதே முறையில் பிரசவம் பார்க்க கார்த்திகேயன் திட்டமிட்டார். அதன்படி, பிரசவம் பார்த்ததில் 3.5 கிலோ எடையில் அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது.
ஆனால், அதன் பிறகே அதிர்ச்சி காத்திருந்தது. பிரசவம் முடிந்த சிறிது நேரத்தில் கிருத்திகாவுக்கு ரத்தப்போக்கு அதிகமாகி மயக்கமடைந்தார்.
அவரை, 108 ஆம்புலன்சில் திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது. குழந்தை பிறந்த சில மணி நேரங்களில், தாய் உயிரிழந்தது அனைத்துத் தரப்பினரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இது தொடர்பாக, கார்த்திகேயன் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 304-ன் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், இன்று அவரை கைது செய்துள்ளனர்.
பெற்ற தாய் இறந்த போக, தந்தை கைதாகி சிறைக்கு செல்ல, பச்சிளம் குழந்தையும், மூன்று வயது பெண் குழந்தையும் பரிதாபித்து நிற்கின்றனர்.