திருப்பூர்: திருப்பூரில் உள்ள பின்னலாடை ஏற்றுமதியாளர்களிடம் 6 கோடி வரை மோசடி செய்ததாகக் கூறி, பாதிக்க முகவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்தார்.
திருப்பூர்: திருப்பூரில் உள்ள பின்னலாடை ஏற்றுமதியாளர்களிடம் 6 கோடி வரை மோசடி செய்ததாகக் கூறி, பாதிக்க முகவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்தார்.
ராயர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி. குண்ணங்கல்பாளையம் பகுதியில் கொள்முதல் தரகராக அலுவலகம் நடத்தி வருகிறார்.

இதனிடையே இத்தாலி நாட்டை சேர்ந்த பெட்டி ரோசிட்டோ என்பவர் திருப்பூர் காங்கயம் சாலையில் பி-டிரேட் என்ற பெயர் கொள்முதல் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் பெட்டி ரோசிட்டோ, முகவரான கிருஷ்ண மூர்த்தி மூலம் திருப்பூரில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களில் தயாரிக்கப்படும் பின்னலாடைகளை மொத்தமாக இத்தாலி நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அந்நாட்டில் வியாபாரம் செய்து வருவது வழக்கம்.
இந்நிலையில், திருப்பூரைச் சேர்ந்த பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு பனியன் தயாரிப்பதற்கான ஆர்டரை, கிருஷ்ணமூர்த்தி மூலம் அவர் கொடுத்துள்ளார். ஆனால், பின்னலாடை பெற்று கொண்டு இதுவரை ரூ.6 கோடி வரை மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட ஏற்றுமதியாளர்கள் பெட்டி ரோசிட்டோவிடம் பணம் கேட்ட போது பணம் தராமல் இழுத்தடிப்பில் ஈடுபட்டவர், ஒரு கட்டத்தில் பணத்தைத் தர முடியாது என கூறியுள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட கிருஷ்ணமூர்த்தி திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்ததோடு, மோசடியில் ஈடுபட்ட பெட்டி ரோசிட்டோவிடமிருந்து பணத்தை மீட்டுத் தர கோரி புகார் மனு அளித்தார்.
ராயர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி. குண்ணங்கல்பாளையம் பகுதியில் கொள்முதல் தரகராக அலுவலகம் நடத்தி வருகிறார்.

இதனிடையே இத்தாலி நாட்டை சேர்ந்த பெட்டி ரோசிட்டோ என்பவர் திருப்பூர் காங்கயம் சாலையில் பி-டிரேட் என்ற பெயர் கொள்முதல் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் பெட்டி ரோசிட்டோ, முகவரான கிருஷ்ண மூர்த்தி மூலம் திருப்பூரில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களில் தயாரிக்கப்படும் பின்னலாடைகளை மொத்தமாக இத்தாலி நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அந்நாட்டில் வியாபாரம் செய்து வருவது வழக்கம்.
இந்நிலையில், திருப்பூரைச் சேர்ந்த பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு பனியன் தயாரிப்பதற்கான ஆர்டரை, கிருஷ்ணமூர்த்தி மூலம் அவர் கொடுத்துள்ளார். ஆனால், பின்னலாடை பெற்று கொண்டு இதுவரை ரூ.6 கோடி வரை மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட ஏற்றுமதியாளர்கள் பெட்டி ரோசிட்டோவிடம் பணம் கேட்ட போது பணம் தராமல் இழுத்தடிப்பில் ஈடுபட்டவர், ஒரு கட்டத்தில் பணத்தைத் தர முடியாது என கூறியுள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட கிருஷ்ணமூர்த்தி திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்ததோடு, மோசடியில் ஈடுபட்ட பெட்டி ரோசிட்டோவிடமிருந்து பணத்தை மீட்டுத் தர கோரி புகார் மனு அளித்தார்.