முத்தையா முரளிதரன் சுழற்பந்தை சந்திப்பது கடினமானதாக இருந்தது : முன்னாள் ஆஸி., வீரர் மைக் ஹசி கோவையில் பேச்சு

கோவை: டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியை விளம்பரப்படுத்தும் நோக்கில் கோவை வந்திருந்த முன்னாள் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் மைக் ஹசி நவ இந்தியா பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளிக்கு வருகை புரிந்தார்.


கோவை: டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியை விளம்பரப்படுத்தும் நோக்கில் கோவை வந்திருந்த முன்னாள் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் மைக் ஹசி நவ இந்தியா பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளிக்கு வருகை புரிந்தார்.

அங்கு அவருக்கு ஆரத்தி எடுத்தும் மாலை அணிவித்தும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அப்பள்ளி மாணவர்களின் பொய்க்கால் குதிரை ஆட்டம், சிலம்பாட்டம் ஆகியவற்றை மைக் ஹசி பார்வையிட்டு ரசித்தார்.



பின்னர் நடைபெற்ற மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் சுழற்பந்தை சந்திப்பது தான் மிகவும் கடினமானதாக இருந்ததாகவும், அவர் பந்தை வீசும் போது கண்களை உருட்டி பந்து வீசுவார் என்றும் தெரிவித்தார். பந்து அவரது விரல்களில் மாயாஜாலம் காட்டும் என்றார்.



"உங்களுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் வேடிக்கையான தருணம் எது?" என்ற மாணவர்களின் கேள்விக்கு, "எம்.சி.ஜி. மைதானத்தில் தென் ஆப்பிரிகவிற்கு எதிரான போட்டியில் டெயில் ஸ்டெயின் பந்தை உயரத் தூக்கி அடிக்க பவுண்டரி லைன் அருகில் நின்றிருந்த நான் அதைப் பிடிக்க முயன்றேன். ஆனால், வெயிலின் காரணமாக பந்தை பிடிக்க முடியவில்லை. மேலும், பந்து எனது கால் அருகே விழுந்தது.

ஓய்வறையில் இந்த பதிவை பார்த்து சக வீரர்கள் கிண்டலடித்தது வேடிக்கையான தருணமாக இருந்தது." என்றார்.



உங்களின் முன்னேற்றதிற்கு யார் காரணம் என்ற கேள்விக்கு, என்னை கிரிக்கெட் விளையாட ஊக்கப்படுத்திய தனது தாய், தந்தை தனது பயிற்சியாளர், நண்பர்கள் என பலர் இருப்பினும் நீண்ட காலமாக தன்னுடன் விளையாடிய வீரர்கள் தான் தனது முனேற்றதிற்கு முக்கிய காரணம் என்றார்.

பின்னர் மாணவர்களுக்கு தனது கையொப்பமிட்ட தொப்பிகளை வழங்கினார். பின்னர் அங்கிருந்து கலை அறிவியல் கல்லூரிக்கு சென்று மாணவர்களுடனான கலந்துரையாடலுக்கு பின்னர் எஸ்.என்.ஆர் கிரிக்கெட் மைதானத்தில் 16 வயதிற்கு உட்பட்ட வீரர்களுடன் கிரிக்கெட் தொடர்பான நுட்பங்கள் குறித்து விளக்கினார்.



இதன் பின்னர் ராமகிருஷ்ணா மருத்துவமனை சென்ற அவர் புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் பேசினார். நாளை காலை புறவழி சாலையில் அமைந்துள்ள சக்தி தொழில் நுட்பக் கல்லூரி மாணவர்களைச் சந்திக்க உள்ளார்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...