ரூ. 2 கோடி இழப்பை சந்திக்கும் மேட்டுப்பாளையம் உருளை கிழங்கு வர்த்தகம் : லாரி ஸ்டிரைக்கை வாபஸ் பெறக் கோரிக்கை

கோவை : லாரிகளின் தொடர் வேலை நிறுத்தத்தால் மேட்டுப்பாளையம் உருளை கிழங்கு வர்த்தகத்தில் நாள் ஒன்றுக்கு ரூ. 2 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதால், வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை : லாரிகளின் தொடர் வேலை நிறுத்தத்தால் மேட்டுப்பாளையம் உருளை கிழங்கு வர்த்தகத்தில் நாள் ஒன்றுக்கு ரூ. 2 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதால், வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தென்னிந்தியாவில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் உருளை கிழங்கு வர்த்தகம் முக்கியமானது. நீலகிரி மாவட்டம் கர்நாடகா, குஜராத், ஆக்ரா, நைனிடால், இந்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து 100 முதல் 120 லோடு உருளை கிழங்கு லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகின்றன. இங்குள்ள 100-க்கும் மேற்பட்ட கிழங்கு மண்டிகளில் தொழிலாளர்கள் மூலம் தரம் பிரிக்கப்பட்டு 45 கிலோ மூட்டைகளாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் கேரள மாநிலத்திற்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.



தற்போது, கடந்த ஜந்து நாட்களாக தொடர்ந்து நடைபெறும் லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக கிழங்கு வரத்து தடைபட்டுள்ளது. ஏற்கனவே, கொண்டுவரப்பட்ட உருளை கிழங்குகளும் விற்று தீர்ந்த நிலையில், ஒரு கிலோ கிழங்கு விலை ரூ. 5 வரை உயர்ந்துள்ளது. மேலும், நாள் ஒன்றுக்கு ரூ. 2 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கிழங்கு மண்டி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர் 

இதேபோல, நீலகிரி மாவட்டத்தில் விளையும் கேரட், பீன்ஸ், முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறிகள் அறுவடை செய்து மேட்டுப்பாளையம் கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேநிலை நீடித்தால் நிலைமை மோசமாக பாதிக்கப்படும் என்பதால் மத்திய, மாநில அரசுகள், லாரி உரிமையாளர்களின் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகளும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...