கோவை: கோவை வாலாங்குளத்தில் மீன்கள் செத்து மிதந்ததைத் தொடர்ந்து, அங்கிருந்து நீர் மாதிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.
கோவை: கோவை வாலாங்குளத்தில் மீன்கள் செத்து மிதந்ததைத் தொடர்ந்து, அங்கிருந்து நீர் மாதிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.
உக்கடம் பகுதியில் உள்ள வாலாங்குளத்தில் நேற்று ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. இந்த சூழலில் குளத்தில் யாரேனும் விஷத்தை கலந்துள்ளனரா? என்ற கோணத்தில் அங்கிருந்து நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு, பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த குளத்தில் அதிக அளவில் கழிவு நீர் கலைக்கப்பட்டதால் தான் மீன்கள் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. இந்த சூழலில் தற்போது நீர் மாதிரிகள் வடவள்ளி அருகே உள்ள தனியார் பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த 1-ம் தேதி அதே பகுதியில் பசு ஒன்று உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.