ரூ. 43 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் திருப்பூர் மாவட்ட ஆட்சியர்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகாவில் நடைபெற்ற சிறப்பு மக்கள் தொடர்பு முகாமில் ரூ. 43 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி வழங்கினார்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகாவில் நடைபெற்ற சிறப்பு மக்கள் தொடர்பு முகாமில் ரூ. 43 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி வழங்கினார்.



திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகாவில் பல்வேறு அரசு துறைகள் சார்பில் மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை வழங்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி தலைமையில் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் இன்று நடைபெற்றது. 

இந்த முகாமில் வருவாய்துறை சமூகநலன் மற்றும் கல்வி வேளாண்மைத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து அரசு துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். முகாமில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு கல்வி உதவி தொகை, விதவை உதவி தொகை மற்றும் முதியோர் மற்றும் ஊனமுற்றோர் உதவி தொகை, திருமண உதவி தொகை, விவசாயிகளுக்கு சோலார் மின் மோட்டார்கள் என மொத்தம் ரூ. 43,34,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முகாமில் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.



"அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை உரிய முறையில் தகுதியான பயனாளிகளுக்கு விரைந்து வழங்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் அரசின் நலத்திட்டங்கள் யாருக்கும் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழாத வகையில், தொடர்ந்து தாலுகா வாரியாக சிறப்பு மக்கள் தொடர்பு முகாம்கள் நடத்தப்படும்," என்றார் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி. 

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...