'மேற்குத் தொடர்ச்சி மலை உயிரினங்கள் சுற்றுச்சூழல் திருவிழா 2018' மாநாடு குறித்து ஆலோசனை

கோவை : நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறும் 'மேற்குத் தொடர்ச்சி மலை உயிரினங்கள் சுற்றுச்சூழல் திருவிழா 2018' மாநாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோவை : நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறும் 'மேற்குத் தொடர்ச்சி மலை உயிரினங்கள் சுற்றுச்சூழல் திருவிழா 2018' மாநாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



கோவையில் வரும் நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் 'மேற்குத் தொடர்ச்சி மலை உயிரினங்கள் சுற்றுச்சூழல் திருவிழா 2018' மாநாடு 3 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. இதில், நாடு முழுவதும் உள்ள வனஆர்வலர்கள், வன பாதுகாப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை சுற்றியுள்ள பல்வேறு சிறப்பம்சங்கள் மற்றும் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. 

இந்த நிலையில், இந்த மாநாடு குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகே உள்ள ஜி.டி. மெட்ரிகுலேசன் பள்ளியில் நடைபெற்றது. இதில், பல்வேறு தொண்டு நிறுவனங்கள், வன ஆர்வலர்கள் மேற்கு தொடர்ச்சி வன பாதுகாப்பு கமிட்டி (WGCC) உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, தங்களது யோசதனைகளையும், திட்டங்களையும் கூறினர். 



இது குறித்து ஓசை அமைப்பின் தலைவரும், டபுள்யூ.ஜி.சி.சி.யின் உறுப்பினருமான கே. காளிதாஸ் கூறியதாவது :- இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம் 'மேற்குத் தொடர்ச்சி மலையின் அவசியத்தை உணர்த்துவதாகும். மலையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதனைப் பாதுகாக்க விதிமுறைகள் வகுப்பது நாட்டை நிர்வகிக்கும் அரசுக்கு முக்கிய கடமையாகும். இந்த மலை நமக்கு தண்ணீர் வழங்குவதுடன், பல்வேறு உயிரினங்களுக்கு வசிப்பிடமாகவும் இருக்கிறது. எனவே, வன பாதுபாதுகாவலர்களின் நீண்ட நாள் கோரிக்கையான மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளை சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதிகளாக அறிவிக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார். 



Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...