'சபரிமலை செல்லும் தமிழக பக்தர்கள் பிளாஸ்டிக் டப்பாக்களை எடுத்துச் செல்வதை தவிர்த்திடுங்கள்'

கேரளா: சபரிமலையில் சுற்றுச்சூழலை பராமரிக்கும் வகையில், பிளாஸ்டிக் மீது கேரள உயர்நீதிமன்றம் முழுமையான தடை விதித்ததுடன், பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

கேரளா: சபரிமலையில் சுற்றுச்சூழலை பராமரிக்கும் வகையில், பிளாஸ்டிக் மீது கேரள உயர்நீதிமன்றம் முழுமையான தடை விதித்ததுடன், பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. 

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலையின் புனிதத்தையும், தூய்மையையும் பராமரிக்க அரசு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. அதன்படி, சபரிமலையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சபரிமலையில் பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் விற்க உயர்நீதிமன்றம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தடை விதித்தது.

இந்நிலையில், சபரிமலை சுற்றுச்சூழல் தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சபரிமலையில் பிளாஸ்டிக் மீது முழுமையான தடை விதித்து இன்று உத்தரவிட்டுள்ளது. பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. 

அதாவது, சபரிமலையில் இந்த வருட மண்டல கால பூஜையின்போது பக்தர்கள் இருமுடியில் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் டப்பாக்கள் என சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவகை பிளாஸ்டிக் பொருட்களையும் கொண்டு வரக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலை தந்திரி பரிந்துரை செய்யும் பொருட்களை மட்டுமே கொண்டு வர முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சபரிமலையில் பிளாஸ்டிக் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டபோதும், பக்தர்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாகத் தொடர்ந்து புகார் எழுந்தது. இதையடுத்து, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து சபரிமலை சிறப்பு ஆணையர் ஆய்வு நடத்தி பரிந்துரைகளை அளித்தார். அதன் அடிப்படையில் இன்று உயர்நீதிமன்றம் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. 

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...