தொடரும் பருவமழை; வரத்து குறைந்து காணப்படுவதால், நீலகிரி காய்கறிகளின் விலை அதிகரிப்பு

நீலகிரி: தென்மேற்கு பருவமழை தொடர்வதால் நீலகிரியில் காய்கறி வரத்து குறைந்து, விலை அதிகரித்து வருகிறது.


நீலகிரி: தென்மேற்கு பருவமழை தொடர்வதால் நீலகிரியில் காய்கறி வரத்து குறைந்து, விலை அதிகரித்து வருகிறது.

 

நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால், இங்கு கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ், காளிபிளவர், பீன்ஸ், உருளைக்கிழங்கு உள்ளிட்ட மலை காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகிறது. குளிர் பிரதேசத்தில் இந்த மலை காய்கறிகள் அதிக விளைச்சலைத் தருவதால், நீலகிரி மாவட்ட விவசாயிகள் மலை காய்கறிகளை அதிகளவில் பயிரிட்டு வருகிறார்கள். 



அறுவடை செய்யப்படும் மலை காய்கறிகள் சரக்கு வாகனங்கள், லாரிகள் மூலம் மேட்டுப்பாளையம், கோவை, அவினாசி, திருச்சி, சென்னை, பெங்களூர் போன்ற பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.



பருவமழை

நீலகிரியில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் ஊட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மலை காய்கறிகள் பயிரிடப்பட்ட விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி சேறாக உள்ளது. அதன் காரணமாக காய்கறிகளை அறுவடை செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

மேலும், தொடர் மழையால் காய்கறிகள் அழுகியும் வருகின்றன. சில விவசாயிகள் முன்கூட்டியே காய்கறிகளை அறுவடை செய்து விட்டனர். இருந்தாலும், தென்மேற்கு பருவமழையால் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டுக்கு மலை காய்கறிகள் வரத்து குறைவாக உள்ளது.



இதனால் காய்கறிகள் விலை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக பொதுமக்கள் தங்களது வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை முழுமையாக வாங்க முடியாமல் அவதி அடைந்து உள்ளனர். இதுகுறித்து வியாபாரி பிரபாகரன் கூறுகையில், "ஊட்டி நகராட்சி சந்தையில் பீட்ரூட் கிலோ ரூ.35 முதல் ரூ.38 வரையும், உருளைக்கிழங்கு ரூ.55 முதல் ரூ.70 வரையும், கேரட் ரூ.30 முதல் ரூ.40 வரையும், முட்டைக்கோஸ்-ரூ.12, பீன்ஸ்-ரூ.65, முள்ளங்கி-ரூ.20, டர்னீப்- ரூ.30, நூல்கோல்-ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ ரூ.35 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த பீன்ஸ் வரத்து குறைவால் ரூ.65 ஆக விலை அதிகரித்துள்ளது. விளைநிலங்களில் விவசாய தொழிலாளர்கள் அறுவடை பணியில் ஈடுபட்டால், அவர்களது கால்கள் சேற்றில் பதியும் நிலை காணப்படுகிறது. காய்கறிகள் வரத்து குறைவால் வெளியிடங்களுக்கு அனுப்புவதும் குறைந்து உள்ளது. மழை குறைந்தால் தான் காய்கறிகள் வரத்து அதிகரிக்கும்." என்றார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...