கோவை மாவட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு கோவை மாவட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு கோவை மாவட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



தமிழக அரசு வழங்கிய வருடாந்திர ஊதிய உயர்வு தொகையை ஊழியர்களுக்கு தராமல் 108 சேவையை நடத்தி வரும் ஜி.வி.கே., இ.எம்.ஆர்.ஐ., நிர்வாகத்தைக் கண்டித்து வரும் 8-ம் தேதி வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஊழியர்களின் கோரிக்கைகளை, அறிவிக்கப்பட்ட வேலை நிறுத்தத்திற்கு முன்னதாகவே விரைவாக நடைபெற 108 ஊழியர்களின் பொதுக்கூட்டம், போராட்டம் என பல வகையில் தங்களின் அழுத்தங்களை அரசுக்கு தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், இதன் தொடர்ச்சியாக இன்று கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு 60-க்கும் மேற்பட்ட 108 ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் ஓய்வில் இருந்த 108 தொழிலாளர்கள் சீருடையுடன் வந்து தங்களின் கோரிக்கையை வலியுறுத்தினர்.

இது குறித்து ஒருங்கிணைப்பாளர் பாக்யராஜ் கூறியதாவது :- ஜி.வி.கே., இ.எம்.ஆர்.ஐ., தனியார் நிறுவனம், தமிழக அரசாங்கம் கொடுக்கும் சம்பள உயர்வை ஊழியர்களுக்கு முழுமையாக வழங்காமல் ஏமாற்றி வருகிறது. எங்களின் நியாயமான சம்பள உயர்வை குறைத்து எங்களைப் போராட தூண்டி வருகிறது. நாங்கள் மக்களுக்கு சேவை செய்ய வந்ததால், தொடர்ந்து நடைபெறும் எங்களுக்கான விரோதப்போக்கை பெரிதுபடுத்தாமல் பொறுத்துக் கொண்டோம். ஆனால், எங்களின் குடும்பம் இன்று குறைவான சம்பளத்தில் வறுமையில் இருக்கிறது. ஆகவே, பொதுமக்கள் எங்கள் போராட்டத்தை ஆதரிக்க வேண்டும். அரசு உரிய முறையில் எங்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும், இவ்வாறு தெரிவித்தார்

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...