உலக சுற்றுச்சூழல் தினம் : வேளாண் பல்கலை.,யில் மரம் நடுவிழா மற்றும் மிதிவண்டி பேரணி

கோவை: உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் மரம் நடுவிழா மற்றும் மிதிவண்டி பேரணி நடைபெற்றது.

கோவை: உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் மரம் நடுவிழா மற்றும் மிதிவண்டி பேரணி நடைபெற்றது. 

உலக சுற்றுச்சூழல் தினம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இன்று (5-6-2018) கொண்டாடப்பட்டது. சுற்றுச்சூழலியல் துறையால் நடத்தப்பட்ட இவ்விழாவில் கல்லூரி ச. மகிமைராஜா, முதன்மையர் (வேளாண்மை) மறைந்த பேராசிரியர் சிவசங்கர் அவர்களின் நினைவாக அரச மரம் நட்டு மரம் நடு விழாவினைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு வகையான மரக்கன்றுகளை நட்டனர். 

பின்னர் நடைபெற்ற “சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மிதிவண்டி பேரணியை” இயற்கை வள மேலாண்மை இயக்குநரகத்தின் தனி அலுவலர் ஜவஹர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்ற இப்பேரணி பால் கம்பெனி, ஆர்.எஸ்.புரம், கவுலிபிரவுன் ரோடு, மருதமலை சாலை வழியாக பல்கலைக்கழகத்தை வந்தடைந்தது. பேரணியில் பங்கேற்றவர்கள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியும், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகித்தும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



இதேபோல, பார்க் குளோபல் பள்ளியிலும் உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்பட்டது. எனவே, சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 

Newsletter

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...