ஜனவரி 1 முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - முதலமைச்சர்

சென்னை: அடுத்தாண்டு ஜனவரி மாதம் முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்ட உள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.


சென்னை: அடுத்தாண்டு ஜனவரி மாதம் முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்ட உள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் பேசியதாவது:- 

பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் பாதிப்புகளை ஆய்வு செய்யும் வல்லுனர் குழு ஒன்றை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உருவாக்கினார். அந்த குழு, ஒருமுறை பயன்படுத்தி தூக்கியெறியும் மக்காத பிளாஸ்டிக் பொருட்களை (தட்டு, குவளை, தாள்கள்) தடை செய்யவும், வாழை இலைகள், பாக்குமட்டை தட்டுக்கள், தாமரை இலைகள் போன்றவற்றின் பயன்பாட்டினை ஊக்குவிக்கவும் ஆலோசனை வழங்கியது. 

மேலும், அன்றாடம் மக்கள் பயன்படுத்தும், பால், தயிர், எண்ணெய், மருத்துவ பொருட்களுக்கான உறைகள் போன்றவற்றிற்கு மட்டும் விலக்கு அளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆகவே, பல்வேறு தீங்குகளை தரக்கூடிய பிளாஸ்டிக் உபயோகம் நிறுத்தப்பட வேண்டும். எனவே, அதன் உற்பத்திக்கும், விற்பனைக்கும் வரும் ஜனவரி மாதம் 1-ம் தேதி முதல் தடை விதிக்கப்படுகிறது. 

இவ்வாறு அவர் பேசினார். 

தமிழக அரசின் இந்த உத்தரவு பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...