மூவர் கொலை விவகாரம்: கோவையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து போராட்டம் நடத்திய தமிழ் புலிகள் கட்சியினர்

கோவை: சிவகங்கையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்ததால் தாழ்த்தப்பட்ட மக்கள் மூவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழ் புலிகள் கட்சியினர் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: சிவகங்கையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்ததால் தாழ்த்தப்பட்ட மக்கள் மூவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழ் புலிகள் கட்சியினர் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கச்ச நத்தம் கிராமத்தில் வாழ்ந்து வரும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் மூவர் உயிரிழந்தனர். தேநீர் கடையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்ததாக கூறி இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரிய வந்தது.

இந்நிலையில், கோவையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும், குறிப்பாக கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருப்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும் தமிழ் புலிகள் கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பாக நாற்காலியில், கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அங்கிருந்த காவல் துறையினர் அவர்களிடம் இருந்த நாற்காலியை எடுத்து வைத்தனர். பின்னர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து மனு அளித்தனர்.

Newsletter

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...