வால்பாறையில் அட்டகாசம் செய்யும் சிறுத்தையைப் பிடிக்க கூண்டு

வால்பாறை: வால்பாறை பகுதியில் மக்களைத் தாக்கி, தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு அமைத்துள்ளனர்.

வால்பாறை: வால்பாறை பகுதியில் மக்களைத் தாக்கி, தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு அமைத்துள்ளனர். 

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ள சின்கோனா தேயிலை தோட்டத்தில் கடந்த வாரம் சிறுத்தைப்புலி தாக்கியதில் 11 வயது மாணவி மற்றும் சந்திரமதி என்ற தொழிலாளி படுகாயமடைந்தனர். அவர்களுக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 



இதைத் தொடர்ந்து, இப்பகுதியில் சிறுத்தைப்புலியின் தொடர் தாக்குதலை தடுக்க வலியுறுத்தி நேற்று சின்கோனா தொழிலாளர்கள் வேலையை புறக்கணித்து நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தகவலறிந்து வந்த காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

சிறுத்தையைப் பிடிக்க கூண்டு வைப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, முற்றுகை போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்நிலையில், இன்று காலை அதே குடியிருப்புக்கு அருகில் ஒரு மாட்டை சிறுத்தை கொன்றுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் அச்சம் ஏற்பட்டது. 



இதனைத் தொடர்ந்து, இன்று சின்கோனா முதல் பிரிவு, பெரியகல்லார் பகுதியில் சிறுத்தையை பிடிக்க கூண்டுகள் வைக்கப்பட்டது. வால்பாறை காவல் ஆய்வாளர் திருமேனி. மானாம்பள்ளி வனச்சரகர் சேகர் தலைமையிலான குழுவினர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...