கோவையில் பொதுமக்களை குச்சியால் தாக்கும் காவலர்: வைரலாகும் வீடியோ

கோவை: கோவையில் வாகன ஓட்டிகள் மற்றும் சாலையில் நடந்து சென்றவர்களை போக்குவரத்து காவலர் ஒருவர் குச்சியால் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை: கோவையில் வாகன ஓட்டிகள் மற்றும் சாலையில் நடந்து சென்றவர்களை போக்குவரத்து காவலர் ஒருவர் குச்சியால் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

செல்வபுரம் காவல் நிலையத்தி்ல் போக்குவரத்து தலைமை காவலராக பணிபுரிபவர் பாஸ்கர். நேற்று இரவு பணியில் இருந்த போக்குவரத்து காவலர் அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகளை குச்சியால் தாக்கினார். இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களை மட்டுமல்லாது. நான்கு சக்கர வாகனத்தில் உள்ளே அமர்ந்து செல்பவர்களையும், தான் வைத்துள்ள குச்சியால் அடித்து வந்துள்ளார். மேலும், நடந்து செல்லும் பொதுமக்களையும் தாக்கியுள்ளார்.



அவர் குடிபோதையில் இருந்ததாகக் கூறி பொதுமக்கள் பலரும் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். 

பொதுமக்கள் அளித்த புகாரையடுத்து, போக்குவரத்து காவலர் பணியின் போது குடிபோதையில் இருந்தாரா? என்பது குறித்து காவல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். போக்குவரத்தை சரி செய்ய வேண்டிய காவலரின் தவறான நடவடிக்கையால் செல்வபுரம் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


Video: Laxman

Newsletter

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...