கர்நடகத்தில் 'காலா'வுக்கு தடை என்பதை ஏற்க முடியாது: கோவையில் அமைச்சர் வேலுமணி பேட்டி

கோவை: ரஜினிகாந்த் காவிரி பிரச்சனை தொடர்பாக குரல் கொடுத்ததால் காலா படதிற்கு கர்நாடகாவில் தடை என்றால், அதனை விட முடியாது என்றும் கர்நாடக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியுள்ளார்.

கோவை: ரஜினிகாந்த் காவிரி பிரச்சனை தொடர்பாக குரல் கொடுத்ததால் காலா படதிற்கு கர்நாடகாவில் தடை என்றால், அதனை விட முடியாது என்றும் கர்நாடக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியுள்ளார்.

தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கையால் காவிரி மேலாண்மை வாரியம் மத்திய அரசு இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

காவிரி நீர் சரியாக வரக்கூடிய வாய்ப்பை பெற்று தந்தவர் அவர் தான்.

கோவையில் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்.

காலா திரைப்படம் கர்நாடகாவில் திரையிட தடை செய்யப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாதது.

திரைப்படத்தை ஏற்பது குறித்து பொதுமக்கள் முடிவு செய்வார்கள்.

ரஜினிகாந்த் காவிரி பிரச்சனை தொடர்பாக குரல் கொடுத்ததால் இந்த தடை என்றால் அதனை விட முடியாது.

காலா திரைப்படம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஆணையம் உரிய முறையில் விசாரணை நடத்தும். 99 நாட்கள் அமைதியாக நடைபெற்ற போராட்டம்,100-வது நாளில் வன்முறையாக மாறியுள்ளதையே நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

பத்திரிக்கையாளர்களை இழிவு படுத்திய நடிகர் எஸ்.வி.சேகர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்."

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...