சுற்றுலா பஸ் கவிழ்ந்த பகுதியில் மீண்டும் விபத்து அபாயம்!: பாதுகாப்பு இல்லாததால் அச்சம்

நீலகிரி: கூடலூர் - ஊட்டி சாலையில் பஸ் கவிழ்ந்து நான்கு பேர் பலியான இடத்தில், மீண்டும் விபத்து அபாயம் உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி: கூடலூர் - ஊட்டி சாலையில் பஸ் கவிழ்ந்து நான்கு பேர் பலியான இடத்தில், மீண்டும் விபத்து அபாயம் உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கூடலூர் - ஊட்டி தேசிய நெடுஞ்சாலை தவளை மலை அருகே, கொண்டை ஊசி பகுதியில், கடந்த மாதம் 26-ம் தேதி, தனியார் பஸ் கவிழ்ந்த விபத்தில், பெங்களூருவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட நான்கு சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். 25 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து ஏற்பட்ட பகுதியில், இதுவரையில் எந்த பாதுகாப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. அங்கு பாதுகாப்பு தடுப்புகள் உள்ளிட்ட எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இன்றி, ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால், ஓட்டுனர்கள் அச்சத்துடன் அப்பகுதியை கடந்து செல்கின்றனர்.



இதுகுறித்து உதகையைச் சேர்ந்த சுற்றுலா வாகன ஓட்டி ஒருவர் கூறுகையில், ''விபத்து நடந்த பகுதியில், அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் முழுவதும் பழுதடைந்து, பாதுகாப்பு இன்றி உள்ளது. இதனால், அப்பகுதியை அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால் மீண்டும் வாகன விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, நெடுஞ்சாலை துறையினர் அப்பகுதியில் பாதுகாப்பு தடுப்புகளை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என்றார்.



இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், "பைக்காரா- கூடலூர் சாலையில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதே பகுதிகளில் தடுப்புசுவர் மற்றும் சாலையோர தடுப்புகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. தவளை மலை அருகே, விபத்து நடத்த குறிப்பிட்ட பகுதியில் ஆய்வு பணிகள் நடந்துள்ளன. அப்பகுதியில் விரைவில் அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்படும்." என்றனர்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...