நீலகிரி: கூடலூர் - ஊட்டி சாலையில் பஸ் கவிழ்ந்து நான்கு பேர் பலியான இடத்தில், மீண்டும் விபத்து அபாயம் உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நீலகிரி: கூடலூர் - ஊட்டி சாலையில் பஸ் கவிழ்ந்து நான்கு பேர் பலியான இடத்தில், மீண்டும் விபத்து அபாயம் உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கூடலூர் - ஊட்டி தேசிய நெடுஞ்சாலை தவளை மலை அருகே, கொண்டை ஊசி பகுதியில், கடந்த மாதம் 26-ம் தேதி, தனியார் பஸ் கவிழ்ந்த விபத்தில், பெங்களூருவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட நான்கு சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். 25 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து ஏற்பட்ட பகுதியில், இதுவரையில் எந்த பாதுகாப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. அங்கு பாதுகாப்பு தடுப்புகள் உள்ளிட்ட எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இன்றி, ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால், ஓட்டுனர்கள் அச்சத்துடன் அப்பகுதியை கடந்து செல்கின்றனர்.

இதுகுறித்து உதகையைச் சேர்ந்த சுற்றுலா வாகன ஓட்டி ஒருவர் கூறுகையில், ''விபத்து நடந்த பகுதியில், அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் முழுவதும் பழுதடைந்து, பாதுகாப்பு இன்றி உள்ளது. இதனால், அப்பகுதியை அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால் மீண்டும் வாகன விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, நெடுஞ்சாலை துறையினர் அப்பகுதியில் பாதுகாப்பு தடுப்புகளை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என்றார்.

இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், "பைக்காரா- கூடலூர் சாலையில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதே பகுதிகளில் தடுப்புசுவர் மற்றும் சாலையோர தடுப்புகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. தவளை மலை அருகே, விபத்து நடத்த குறிப்பிட்ட பகுதியில் ஆய்வு பணிகள் நடந்துள்ளன. அப்பகுதியில் விரைவில் அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்படும்." என்றனர்.
கூடலூர் - ஊட்டி தேசிய நெடுஞ்சாலை தவளை மலை அருகே, கொண்டை ஊசி பகுதியில், கடந்த மாதம் 26-ம் தேதி, தனியார் பஸ் கவிழ்ந்த விபத்தில், பெங்களூருவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட நான்கு சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். 25 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து ஏற்பட்ட பகுதியில், இதுவரையில் எந்த பாதுகாப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. அங்கு பாதுகாப்பு தடுப்புகள் உள்ளிட்ட எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இன்றி, ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால், ஓட்டுனர்கள் அச்சத்துடன் அப்பகுதியை கடந்து செல்கின்றனர்.

இதுகுறித்து உதகையைச் சேர்ந்த சுற்றுலா வாகன ஓட்டி ஒருவர் கூறுகையில், ''விபத்து நடந்த பகுதியில், அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் முழுவதும் பழுதடைந்து, பாதுகாப்பு இன்றி உள்ளது. இதனால், அப்பகுதியை அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால் மீண்டும் வாகன விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, நெடுஞ்சாலை துறையினர் அப்பகுதியில் பாதுகாப்பு தடுப்புகளை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என்றார்.

இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், "பைக்காரா- கூடலூர் சாலையில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதே பகுதிகளில் தடுப்புசுவர் மற்றும் சாலையோர தடுப்புகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. தவளை மலை அருகே, விபத்து நடத்த குறிப்பிட்ட பகுதியில் ஆய்வு பணிகள் நடந்துள்ளன. அப்பகுதியில் விரைவில் அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்படும்." என்றனர்.