வால்பாறையில் சிறுத்தை தாக்கியதில் பெண் தொழிலாளி படுகாயம்

வால்பாறை: வால்பாறை பகுதியில் சிறுத்தை தாக்கி பெண் தொழிலாளி படுகாயமடைந்தார்.

வால்பாறை: வால்பாறை பகுதியில் சிறுத்தை தாக்கி பெண் தொழிலாளி படுகாயமடைந்தார். 

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது சின்கோனா தேயிலை தோட்டம். தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத்திற்கு சொந்தமான இந்த தோட்டத்தில் சந்திரமதி (45) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு 7 மணியளவில் வீட்டின் பின்புறம் சென்றுள்ளார். 

அப்போது அங்கிருந்த புதரில் பதுங்கி இருந்த சிறுத்தைப் புலி திடீரென பாய்ந்து அவரை பின்பக்கமாக தாக்கியது. இதனால் அவர் சத்தம் போட்டபடி கீழே விழுந்தார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த மக்கள் ஓடி வரவே சிறுத்தை அவரை விட்டு விட்டு ஓடியது. 

பின்னர், சந்திரமதியை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேற்கொண்டு தீவிர சிகிச்சைக்காக அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.



கடந்த வாரம் அதே பகுதியில் சிறுத்தைப் புலி தாக்கியதில் 11 வயது மாணவி படுகாயம் அடைந்தார். இந்த சூழலில் மீண்டும் அதே போன்ற சம்பவம் நடைபெற்ற காரணத்தால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும், கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்கக் கோரிக்கை வைத்துள்ளனர்.



Newsletter

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...