ஏ.டி.எம் மையத்தில் தீ விபத்து: பல லட்சம் ரொக்க பணம் தப்பியது

கோவை: மேட்டுப்பாளையம் அருகே ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி ஏ.டி.எம் மையத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

கோவை: மேட்டுப்பாளையம் அருகே ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி ஏ.டி.எம் மையத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த அன்னூரில் சக்தி சாலையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது. பிரதான சாலையின் முன்பு உள்ள இந்த வங்கியின் கட்டிடத்தின் கீழ் பகுதியில் ஏ.டி.எம் மெசின் அமைந்துள்ளது. 

இந்நிலையில், நேற்று இரவு ஏ.டி.எம் மெசினில் இருந்து திடீரென கரும்புகை வருவதைக் கண்ட ஏ.டி.எம் காவலாளி உடனடியாக சுதாரித்து அன்னூர் தீயணைப்பு நிலையத்திற்கும் காவல் துறைக்கும் தகவல் அளித்தார். தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு மெசினின் பின் பகுதியில் பற்றிய தீயை அனைத்தனர்.



இதனால் ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் ரொக்க பணம் சேதமாவது தடுக்கப்பட்டது. தொடர்ந்து காவல்துறை சார்பில் நடைபெற்ற விசாரணையில் மின் அழுத்தம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். இருப்பினும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...